செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரூ 40 க்கு பதில் ரூ 180க்கு பயணச்சீட்டு இடையில் உள்ள ஊரில் உள்ளவங்க மனுசங்களா கண்ணுக்கு தெரியலையா ? அரசு விரைவு பேருந்து நடத்துனர் அடாவடி

Aug 02, 2024 09:39:27 AM

அரசு விரைவு பேருந்தில் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்கே 40 ரூபாய்தான் கட்டணம் என்ற நிலையில் இடையில் உள்ள ஸ்பிக் நகருக்கு 180 ரூபாய் கட்டணம் வசூலித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

தூத்துக்குடி அடுத்த ஸ்பிக் நகரை சேர்ந்த ரெயில்வே ஊழியரான மணிகண்டன் என்பவர், திருச்செந்தூரில் இருந்து தனது ஊருக்கு செல்ல தூத்துக்குடி வழியாக திருச்சி செல்லும் TN68N 1095 என்ற அரசு விரைவு பேருந்தில் ஏறி உள்ளார். இந்த பேருந்து இடையில் எங்கும் நிற்காது என்று அரசு பேருந்து நடத்துனர் தெரிவித்த நிலையில் , பேருந்தில் இடம் காலியாக இருந்ததால் மணிகணடன் அதில் ஏறி அமர்ந்ததாக கூறப்படுகின்றது.

தான் இறங்க வேண்டிய ஸ்பிக் நகருக்கு 40 ரூபாய் தான் பயணக்கட்டணம் என்ற நிலையில், அங்கு பேருந்தை நிறுத்த மறுத்த நடத்துனர், 180 ரூபாய் கொடுத்து மதுரைக்கு பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளச்செய்ததாகவும், அதன் பின்னரே அவரை ஸ்பிக் நகரில் இறக்கி விட்டு சென்றதாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த திருச்சி அரசு போக்குவரத்துகழக பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், சம்பந்தப்பட்ட நடத்துனரிடம் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். அதேபோல சாத்தான் குளம் அருகே உள்ள தேர்க்கண் குளம் கிராமத்து மக்கள் தங்கள் ஊருக்குள் வந்து செல்ல மறுத்த தனியார் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்

பேருந்து உரிமையாளர் சொல்லியும் கேட்காத ஓட்டுனருக்கு எதிராக கிராமத்து மக்கள் ஆவேசமானதால் பேருந்து ஓட்டுனர் பேருந்தை ஊருக்குள் திருப்பி பயணிகளை ஏற்றிச்சென்றார்.


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement