செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பள்ளியில் விளையாடிய மாணவனின் தலையில் ஈட்டி பாய்ந்தது எப்படி ? மூளைச்சாவு அடைந்த சோகம்

Jul 30, 2024 07:37:37 AM

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே சீயோன் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு பயிற்சியின் போது மாணவர்கள் எறிந்த ஈட்டி, சிலம்பம் விளையாடிக் கொண்டிருந்த மாணவனின் தலைமீது பாய்ந்ததில் அவன் மூளை சாவு அடைந்ததால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் கிஷோர், 15 வயதான இவர் அந்த பகுதியில் உள்ள சீயோன் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். சிலம்பத்தில் பல்வேறு பரிசுகளை வென்றுள்ள கிஷோர், கடந்த 24 ந்தேதி மாலை பள்ளியில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்

பள்ளியின் விளையாட்டு மைதானம் மிகக்குறுகிய பகுதி என்பதால் பல்வேறு விளையாட்டுகளுக்கு மாணவர்கள் அருகருகே பயிற்சியில் ஈடுபட்டு கொட்டிருந்தனர். அப்போது ஈட்டி எறிதல் போட்டிக்காக மாணவன் வீசிய ஈட்டி தவறுதலாக , சிலம்பம் ஆடிக் கொண்டிருந்த மாணவன் கிஷோரின் தலையில் குத்தி பாய்ந்ததாகவும், சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி சரிந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதையடுத்து உயிருக்கு போராடிய மாணவன் கிஷோரை சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையிலும் கிஷோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் அங்கிருந்து விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கிஷோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தனது மகன் மூளைச்சாவு அடைந்ததை கேள்விப்பட்டு அவரது தாய், விஷம் குடித்து விபரீத முடிவெடுத்தார் அவரை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவத்தை மறைக்க முயன்றதாக தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது உறவினர்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்கள் பலவித விளையாட்டுக்களை கற்றுக்கொள்ள நெருக்கமான இடத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது ஏன் ? என்பது குறித்தும், சிறுவன் மீது ஈட்டி பாயும் அளவுக்கு கூர்மையாக இருந்ததா ? என்பது குறித்தும், பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவு என்னென்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement