செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரூ.70 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட நகை வியாபாரியின் மகன்கள் அதிரடியாகக் களமிறங்கி ஆட்டத்தைக் கலைத்த போலீசார் ரௌடிகளுடன் கைதாகி கம்பி எண்ணும் வியாபாரி!

Jul 29, 2024 09:35:34 AM

திருவண்ணாமலையில் 70 லட்சம் ரூபாய் பணம் கேட்டு காரில் கடத்திச் செல்லப்பட்ட நகைக்கடை அதிபரின் 2 மகன்களை பெங்களூரு செல்லும் வழியில் போலீசார் மீட்டனர். சூதாட்டத்தில் பணம், நகையை இழந்த மற்றொரு நகை வியாபாரி பெங்களூருவிலிருந்து ஆட்களை ஏற்பாடு செய்து கடத்த முயன்று போலீசில் சிக்கியுள்ளார்.

திருவண்ணாமலை அசலியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயின் ஜூவல்லரி அதிபரின் மகன்கள் இருவரையும் கடத்தி

திருவண்ணாமலை அசலியம்மன் கோவில் தெருவில் இயங்கி வரும் ஜெயின் ஜூவல்லரி நகைக்கடை வியாபாரி நரேந்திரகுமாரின் மகன்கள் ஜித்தேஷ், ஹரிஹந்த் ஆகிய இருவரையும் அதே பகுதியில் நகை கடை வைத்துள்ள ஹன்ஸ்ராஜ் என்பவர் பெங்களூரில் இருந்து கூலிப்படையை வைத்து கடத்தி , நரேந்திரகுமாரிடம் 70 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார்.

முதற்கட்டமாக 10 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்ட ஹன்ஸ்ராஜ் நரேந்திரகுமாரிடம் மேலும் 60 லட்சம் கேட்டுள்ளார். கடத்தல் கும்பலுக்கும் நகைக்கடை உரிமையாளர் நரேந்திரகுமாருக்கும் இடைத்தரகராக ஹன்ஸ்ராஜ் செயல்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சுதாரித்துக் கொண்ட திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர் அதிரடியாக செயல்பட்டு பெங்களூருவுக்குக் கடத்திச் செல்லப்பட்ட ஜித்தேஷ், ஹரிஹந்த்தையும் மேல் செங்கம் சுங்கச்சாவடி அருகே மீட்டுள்ளனர். மேல்செங்கம் சுங்கச்சாவடி அருகே சந்தேகப்படும்படியாக வந்த காரை மடக்கி பிடித்து இருவரையும் மீட்டுள்ளனர்.

நகைக்கடை அதிபர் ஹன்ஸ்ராஜ், பெங்களூரு ரவுடி கும்பலைச் சேர்ந்த பில்லா, பிரவீன், சீனு, முயல் என்கின்ற ராஜ்குமார் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, ஒரு கார் மற்றும் 9 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த கடத்தலில் தொடர்புடை 6 நபர்களை, தனிப்படை அமைத்து திருவண்ணாமலை போலீசார் தேடி வருகின்றனர்.

கடத்தில் ஈடுபட்டு கைதான 5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து திருவண்ணாமலை போலீசார் விசாரணை மேற்கொண்டர். அப்போது, தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, நரேந்திரகுமாரின் மகன்களை கடத்தி, பணம் பறிக்கத் திட்டமிட்டதை ஹன்ஸ்ராஜ் ஒப்புக் கொண்டதாக, போலீசார் தெரிவித்தனர்.

நகை, பணம் உள்ளிட்டவற்றை வைத்து சூதாட்டமாடி நஷ்டமடைந்து, விரக்தியடைந்த ஹன்ஸ்ராஜ் பெங்களூருவை சேர்ந்த பிரபல ரவுடி பில்லா, விக்ரம், மனோ என்கிற கபாலி, வாசிம் ஆகியோரை வைத்து கடத்தலை அரங்கேற்றியுள்ளார். சனிக்கிழமை இரவு 10.53 மணி அளவில் ஜித்தேஷும் ஹரிஹந்த்தும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது திருவண்ணாமலை ராமலிங்கனார் தெரு அருகே வழிமறித்து, அடித்து தாக்கி கார் மூலம் மின்னல் வேகத்தில் கடத்திச் சென்றுள்ளனர்.

கடத்தி பணம் பறிக்க முயன்று கைதான ஜூவல்லரி அதிபர் ஹன்ஸ்ராஜ், பெங்களூரு ரவுடிகள் 4 பேரிடம் திருவண்ணாமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement