செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காதல் நிக்காஹ்.. மருமகனுக்கு ஸ்கெட்ச் போட்ட காதலி குடும்பம்..! கூலிப்படை ஏவி காலி செய்தனர்

Jul 23, 2024 08:31:45 AM

காதல் திருமணம் செய்த மருமகனுக்கு தொழில் அமைத்துக்கொடுப்பது போல நடித்து, அவரை கூலிப்படை ஏவி கொலை செய்ததாக காதல் மனைவியின் தாய்,  தந்தை, சித்தி உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். 

காதல் திருமணம் செய்ததால் மனைவியின் குடும்பத்தினரால் கவுரவ கொலை செய்யப்பட்ட ஹசனைய்யா இவர் தான்..!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த பத்தளப்பள்ளி என்னுமிடத்தில் ஆந்திராவை சேர்ந்த ஹசனய்யா என்பவர் ஆண்கள் தங்கும் விடுதி ஒன்றை லீசுக்கு எடுத்து நடத்தி வந்தார். விடுதி தொடங்கிய 4 வது நாளில் அவர் தங்கி இருந்த அறையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். போலீஸ் விசாரணையில் மகளின் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மருமகனை , மாமனாரே கூலிப்படை ஏவி கொலை செய்த
பகீர் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

ஆந்திராவின் நந்தியால் மாவட்டத்தை சேர்ந்த ஹசனய்யா என்பவர் அதே பகுதியை சேர்ந்த பிரம்பீவி என்ற இளம் பெண்ணை 21 மாதங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், பெண்ணின் வீட்டில் வசதி அதிகம் என்பதால் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் மகளின் ஆசைக்காக மருமகனை ஏற்றுக் கொண்டது போல நடித்து தங்கள் வீட்டிலேயே தங்கி இருக்க செய்ததாக கூறப்படுகின்றது.

கடந்த 1 1/2 வருடமாக ஹசனையாவை கொலை செய்ய பல முறை முயன்றும் மகளின் முகத்தை பார்த்து இரக்கப்பட்டு கொலை செய்யும் திட்டம் தள்ளிப்போய் கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது. இதற்கிடையே இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததால் ஹசனையா மீது கோபம் இன்னும் அதிகரித்துள்ள்ளது. ஹசனையாவை கொலை செய்து விட்டு , தனது மகளுக்கு தங்கள் தகுதிக்கு நிகரான செல்வ செழிப்புள்ள பையனை பார்த்து 2 வது திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

கொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பல லட்சம் செலவழித்து தமிழகத்தின் பத்தளப்பள்ளியில் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி ஒன்றை மருமகன் ஹசனையாவுக்கு லீசுக்கு எடுத்து கொடுத்துள்ளனர் மனைவியின் குடும்பத்தினர். ஹசனய்யாவின் மாமனார், மாமியார் பீரம்மா, சின்ன மாமியார் மாதேவி ஆகியோர் கொலைக்கு திட்டம் வகுத்த நிலையில் , மாதேவி தனது காதலானான சீனிவாசலு என்ற ரவுடி தலைமையிலான கூலிப்படையை அனுப்பி வைத்துள்ளார்.

தங்கும் விடுதி திறந்த நாள் முதல் 4 நாட்களாக அங்குள்ள அறையில் தங்கி இருந்த கூலிப்படையினர் சம்பவத்தன்று ஹசனய்யாவை கொலை செய்து விட்டு தப்பியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இந்த கவுரவ கொலை விவகாரத்தில் ஹசனய்யாவின் மாமனார் காதர் வல்லி, மாமியார் பீரம்மா, சித்தி மாதேவி, கூலிப்படை தலைவர் சீனிவாசலு உள்ளிட்ட 8 பேரை போலீசார் ஆந்திராவில் கைது செய்து ஓசூர் அழைத்து வந்தனர். இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்திவிட்டு மருமகனை யாரோ கொலை செய்து விட்டனர் என்று குடும்பமே அழுது நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement