செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மாணவன் கடத்தல்.. ஐ.ஏ.எஸ் அதிகாரியின் Ex மனைவி உயிரை மாய்த்தார்..! போலீசுக்கு பயந்து விபரீதம்

Jul 24, 2024 07:21:04 AM

மதுரையில் பள்ளிக்கு சென்ற 14 வயது சிறுவனை, ஆட்டோ ஓட்டுனருடன் கடத்திய வழக்கில் தேடப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை மாநகர் எஸ்.எஸ்.காலனி விவேகானந்தர் தெரு பகுதியை சேர்ந்த மைதிலி ராஜலட்சுமி என்பவரின் 14 வயது மகன் பள்ளிக்கு ஆட்டோவில் சென்ற போது மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். 2 கோடி ரூபாய் கொடுக்கா விட்டால் சிறுவனை கொலை செய்து விடுவதாக கடத்தல் காரன் மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

பள்ளி மாணவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக டிஸ்மிஸ் போலீஸ்காரர் செந்தில்குமார், நெல்லை ரஹ்மான் பேட்டையை சேர்ந்த ரவுடி அப்துல்காதர், தென்காசி வீரமணி, காளிராஜ் ஆகிய மூவரை எஸ்.எஸ்.காலணி காவல்துறையினர் கைது செய்தனர்.

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடத்தல் சம்பவத்துக்கு கூலிப்படையை ஏவியதாக ரவுடி ஐகோர்ட் மகாராஜா, அவரது காதலியும் ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவியுமான சூர்யா என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

இருவரும் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அங்கிருந்து அவர்கள் இருவரும் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பிச்சென்ற நிலையில் , இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் ரவுடி ஐகோர்ட் மகாராஜாவின் காதலி சூர்யா குஜராத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சூர்யாவின் மரணத்தின் பின்னணி குறித்து விசாரிக்க தனிப்படை போலீசார் குஜராத்துக்கு விரைந்துள்ளனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement