நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பிதர்காடு அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் மாயமான நிலையில், குணசேகரன் என்பவரின் உடல் மட்டும் கிடைத்துள்ளது.
கவியரசன் என்ற மாணவரை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் ஆறுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றின் அருகே செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.