செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஒரு செல்ஃபி கேட்ட பாவத்துக்கு நடிகை ரோஜா இப்படி செய்யலாமா..? தூய்மை பணியாளர்கள் தீண்டத்தகாதவர்களா..? பக்கத்தில் நின்னா அழுக்கு ஒட்டிக்குமாம்...

Jul 18, 2024 07:50:09 AM

திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிடச்சென்ற இடத்தில் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டவர்களுடன் உற்சாகமாக போஸ் கொடுத்த நடிகை ரோஜா, அருகில் நின்று போட்டோ எடுக்க ஆசைப்பட்ட தூய்மை பணியாளார்களை பார்த்து முகத்தை சுழித்து தள்ளி நிற்க சொன்ன சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

எல்லா ரசிகர்களுடனும் உற்சாகமாக செல்ஃபிக்கு போஸ் கொடுத்த நடிகை ரோஜா தூய்மை பணியாளர்களை கண்டதும் தனது முகம் சுழித்த காட்சிகள் தான் இவை..!

நடிகையும் , ஆந்திர மாநில ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சருமான நடிகை ரோஜா, தேர்தல் தோல்விக்கு பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். கணவர் ஆர்.கே செல்வமணியுடன் சேர்ந்து சுவாமி கும்பிட்டு விட்டு திரும்பிய ரோஜாவுடன் செல்பி எடுக்க ரசிகர்கள் போட்டிப்போட்டனர்.

கோபப்படாமல் அனைவருடனும் சிரித்த முகத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

கோயில் குருக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ரோஜாவின் அருகில் நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர்.

இதனை பார்த்த கோவிலின் தூய்மைப்பணியாளர்களான இரு பெண்கள், அவரது அருகில் நின்று புகைப்படம் எடுக்க சென்றனர். அவர்களை கண்டதும் முகம் சுழித்தவாறு ரோஜா, கையால் சைகை காண்பித்து தள்ளி நிற்க சொன்னார்.

அந்த இரு தூய்மைப்பணியாளர்களும் கோபித்துக் கொள்ளாமல், ரோஜா சொன்னபடி தள்ளி நின்றே புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இது குறித்து அவருடன் வந்தவர்கள் கூறுகையில் அந்த இரு பெண்களும் அழுக்காக இருந்ததாகவும், அதனால் தான் மேடம், ஒட்டாமல் நிற்க சொன்னதாகவும் விளக்கம் என்ற பெயரில் சமாளித்து சென்றனர்.

கோவிலுக்குள்ளும், கோவிலுக்கு வெளியேயும் நாம் சுகாதாரமாக சாமி கும்பிடுவதற்காக , தூய்மைப்பணியில் ஈடுபடும் அவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் தானே ? அவர்களை வெறுத்து ஒதுக்கியது ஏன் ? என்று கேள்வி எழுப்பி உள்ளனர் நெட்டிசன்கள்


Advertisement
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு
நாமக்கல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள உணவகம் ஒன்றில் அரசு முத்திரையுடன் இருந்த முட்டைகள்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement