செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரூ 2 கோடி பணத்துக்காக பள்ளி மாணவன் கடத்தலில் போலீஸ்காரரும்.. ரவுடியும்.. கூட்டு..! அம்பலப்பட்ட bad காம்பினேசன்.

Jul 13, 2024 10:11:56 AM

மதுரையில் 2 கோடி ரூபாய் கேட்டு பள்ளி மாணவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட போலீஸ் காரரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மிரட்டல் விடுத்த ரவுடியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

மதுரை எஸ்.எஸ். காலனியை சேர்ந்த ராஜலெட்சுமி என்பவரது 14 வயது மகன் ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற போது ஆம்னி காரில் வந்த மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் மிரட்டி மாணவனையும், ஆட்டோ ஓட்டுனரையும் கடத்திச்சென்றது. ஆட்டோ ஓட்டுனரின் செல்போனில் இருந்து மாணவனின் தாய் ராஜலெட்சுமியை தொடர்பு கொண்ட கடத்தல் காரன் 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்தான்

ராஜலெட்சுமியின் புகாரின் பேரில் போலீசார் தங்களை தேடுவதை அறிந்த கடத்தல் கும்பல் மாணவனையும், ஆட்டோ ஓட்டுனரையும் செக்கானூரணி அருகே கின்னிமங்கலம் காட்டுப்பகுதிக்குள் இறக்கி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகின்றது. பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட ஆம்னி கார் சென்ற ரூட்டை பிடித்தனர். தேனி மாவட்டம் , போடி பகுதியில் வைத்து செந்தில் குமார் என்பவரை கைது செய்தனர். தமிழ் நாடு காவல்துறையில் காவலராக பணியில் இருந்த செந்தில்குமார் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

அவர் தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி ஒருவனுடன் சேர்ந்து தனக்கு தெரிந்த பெண்மணி ஒருவருக்காக இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. எஸ்.எஸ். காலணியை சேர்ந்த பெண்மணி ஒருவரிடம் இருந்து , ராஜலெட்சுமியின் கணவர் ராஜ்குமார் வணிகவளாகம் ஒன்றை விலைக்கு வாங்கிய வகையில் ஒன்றரை கோடி ரூபாய் வரை பணம் கொடுக்க வேண்டி இருந்ததாக கூறப்படுகின்றது.

இதற்காக கடன் மேல் கடன் வாங்கி கடன் தொல்லையால் மன உளைச்சல் அடைந்த ராஜ்குமார் 6 மாதத்திற்கு முன்பாக உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது. அதன் பின்னர் அந்த பணத்தை கொடுக்க இயலாததால் ராஜலட்சுமி இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகின்றது. அந்த 1 1/2 கோடி ரூபாய் பணத்துடன் கடத்தல் கும்பலுக்கும் கூலியாக பணம் கொடுக்க வேண்டும் என்பதால் அந்த பெண்மணி, ரவுடியை ஏவி மாணவனை கடத்தி , 2 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட பெண்மணியை மடக்கிய போலீசார், கடத்தல் கும்பலை சேர்ந்த நெல்லை ரஹ்மான்பேட்டையை சேர்ந்த அப்துல்காதர், தென்காசி சிவகிரி பகுதியில் உள்ள வீரமணி, காளிராஜ் ஆகிய மூவரை கைது செய்தனர். ஆடியோவை வைத்து ரவுடியை அடையாளம் கண்ட நெல்லை, தென்காசியை சேர்ந்த தனிப்படை காவல்துறையினர் 3 பேரையும் பிடித்து SSகாலனி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement