செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

வழக்கறிஞர் விபச்சார மையம் நடத்த பாதுகாப்பு கோருவதா..? பாலியல் தொழிலுக்கு பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடுத்த வழக்கறிஞர் மீது அபராதம் விதித்த நீதிபதி

Jul 12, 2024 08:54:50 PM

பாலியல் தொழிலுக்கு பாதுகாப்பு கேட்டு வழக்குத் தொடுத்த வழக்கறிஞருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

குமரி மாவட்டத்தை சேர்ந்த ராஜா முருகன் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில், ஃபிரண்ட்ஸ் ஃபாரெவர் ட்ரஸ்ட் என்ற பெயரில் பாலியல் சேவைகளை வழங்கி வருவதாகவும், தம் மீது வழக்குப் பதிவு செய்யும் போலீசார் தொல்லை கொடுக்காமல் தடுப்பதோடு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மனுதாரர் வழக்கறிஞர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு விபச்சார மையம் நடத்த பாதுகாப்பு கோருவது நீதிமன்றத்திற்கு அதிர்ச்சியை அளிப்பதாக கூறியுள்ளார். தமிழகத்தில் பாலியல் தொழில் தடை செய்யப்பட்ட ஒன்று என்ற நிலையில், தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் பார் கவுன்சில் அடையாள அட்டை வைத்துள்ள ஒருவர், வழக்கறிஞர் என்ற பெயரில் இதுபோன்ற விஷயத்தை செய்து வந்தது துரதிஷ்டவசமானது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் வழக்கறிஞர்களின் நற்பெயர் குறைந்து வருவதை பார் கவுன்சில் உணர வேண்டிய தருணம் இது என்றும், இனிவரும் காலங்களிலாவது பார் கவுன்சிலில் பதிவு செய்யும் நபர்களின் பின்புலம் மற்றும் அவர்கள் பயின்ற நிறுவனங்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement