செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தீபக்ராஜா கொலைக்கு பதில் காட்டுக்குள் பதுங்கிய ரவுடியை துப்பாக்கியால் சுட்டுத்தூக்கிய போலீஸ்..! கூலிப்படை ஆபரேசனில் முதல் பலி

Jul 12, 2024 08:09:22 AM

நெல்லையில் தீபக்ராஜா கொலைவழக்கில் தொடர்புடையதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட ரவுடி நவீனுக்கு திருச்சியில் அடைக்கலம் கொடுத்ததாக தேடப்பட்டு வந்த ரவுடி துரை என்பவர் புதுக்கோட்டை அருகே போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கூலிப்படை ஆபரேசனில் போலீஸ் வைத்த குறிக்கு முதலாவதாக விழுந்த பலி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.

நெல்லையில் கொல்லப்பட்ட ரவுடி தீபக்ராஜா கொலை வழக்கில் கூலிப்படை ரவுடியான நவீன் என்பவர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். நவீன் ஏற்கனவே சென்னை மெரீனாவில் ரவுடி ஆற்காடு சுரேஷ் என்பவரது கொலை வழக்கிலும் போலீசாரால் கைது செய்யப்பட்டவர். இவரை பெரிய ரவுடிகள் பின்னணியில் இருந்து கூலிப்படை போல இயக்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்தவகையில் தீபக்ராஜா கொலை சம்பவத்துக்கு பின்னர் நவீனுக்கு திருச்சியில் அடைக்கலம் கொடுத்தது ரவுடி துரை என்கிற துரைசாமி என்பது தெரியவந்ததால் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அண்மையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்துக்கு பின்னர் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. குறிப்பாக கூலிப்படை ரவுடிகள், தேடப்படும் ரவுடிகளை விரைவாக கைது செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

அந்தவகையில் திருச்சி போலீசார் தேடிவந்த ரவுடி துரைசாமி புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்து வேறு ஒரு கொலைக்கு சதி திட்டம் தீட்டி வருவது தெரியவந்தது. இதையடுத்து காட்டுப்பகுதிக்குள் இருந்த ரவுடி துரையை போலீசார் பிடிக்கச்சென்ற போது நடந்த பதில் தாக்குதலில் துரை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

காட்டுக்குள் ஆலங்குடி காவல் ஆய்வாளர் முத்தையா தலைமையிலான போலீசார் ரவுடி துரையை சுற்றி வளைத்ததாகவும் , அவர், காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை அரிவாளால் தாக்கியதால் தற்காப்புக்காக சுட்டதில் துரை பலியானதாக போலீசார் தெரிவித்தனர். காயம் அடைந்த எஸ்.ஐ.மகாலிங்கம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

கொல்லப்பட்ட துரையின் சடலம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிணக்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது

போலீஸ் என்கவுடரில் பலியான துரை, ராமநாதபுரத்தை பூர்வீகமாக கொணடவர் என்றும் நெட்டூர் கண்ணன் என்ற கூலிப்படை ரவுடியுடன் சேர்ந்து கூலிக்காக கோவையிலும் ஒரு கொலை சம்பவத்தை நிகழ்த்தியவர் என்று சுட்டிக்காட்டிய போலீசார் , கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 57 வழக்குகள் துரை மீது இருப்பதாக தெரிவித்தனர். கூலிப்படையை ஒழிக்க போலீசார் எடுத்துள்ள இரும்புக்கர நடவடிக்கையின் முதல் பலி ரவுடி துரைசாமி என்கின்றனர் போலீசார்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement