செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

என்னடா ஒரே பித்தலாட்டமா இருக்கு ? இண்டஸ் இண்ட் வங்கியை பூட்டிய பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ..! பணத்துடன் கம்பி நீட்டிய கலெக்சன் ஏஜெண்ட்

Jul 11, 2024 09:41:56 AM

கடலூர் இண்டஸ் இண்ட் வங்கியில் கடன் வாங்கி பைக் வாங்கியவர்களிடம் 3 மாதமாக தவணை தொகையை ஜி பேயில் வசூலித்துக் கொண்டு வங்கியின் கலெக்சன் ஊழியர் கம்பி நீட்டிய நிலையில், கடனை முறையாக செலுத்தவில்லை என்று அபராதவட்டி விதித்ததால் வங்கியை கடன் வாங்கியவர்கள் இழுத்து பூட்டினர்

கடலூர் இம்பிரியல் சாலையில் அமைந்துள்ள INDUSIND வங்கிக்கு வாடிக்கையாளர் உறவினர்களுடன் பூட்டு போட்ட காட்சிகள் தான் இவை..!

கடலூர் வண்டி பாளையத்தை சேர்ந்த நந்தகுமார் என்பவர் இந்த வங்கியில் இரண்டு சக்கர வாகனத்திற்கான கடன் வாங்கினார். கடந்த மூன்று மாதங்களாக அவர் வண்டிக்கான தவணையை செலுத்த வங்கியில் சர்வர் பிரச்சனை எனக்கூறி கலெக்ஷன் ஏஜென்ட் மணிவண்ணன் ஜி பேயில் பெற்றுள்ளார். பணம் கட்டியதற்கான ரசீது கேட்டபோதும் சர்வர் பிராப்ளம் காரணமாக ரசீது வரவில்லை என கலெக்ஷன் ஏஜென்ட் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நந்தகுமார் 3 மாத தவணை தொகையை கட்டவில்லை எனக் கூறி வங்கி அவருக்கு வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுத்துள்ளனர். நந்தகுமார் கடந்த ஒரு வாரமாக தான் பணம் செலுத்தியதற்கான ஆதாரத்துடன் வங்கிக்கு அலைந்த போது அங்கு பொறுப்பில் உள்ளவர்கள் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். ஏஜெண்டிடம் செலுத்திய பணத்துக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, 3 மாத தவணையை அபராதத்துடன் செலுத்த கூறிய அதிகாரிகள், வங்கியின் அதிகார பூர்வ கலெக் ஷன் ஏஜெண்டான மணிவண்னன் ஏமாற்றி பெற்றுச்சென்ற பணத்துக்கு தாங்கள் பொறுப்பு ஏற்கமுடியாது என்று கைவிரித்து விட்டதாக கூறப்படுகின்றது.

தங்கள் பணத்துக்கு உரிய பதில் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த நந்தகுமார் தனது உறவினர்களுடன் வங்கிக்கு வந்து அதிகாரிகளிடம் கேட்ட போது சென்னைக்கு சென்று தலைமை அலுவலகத்தில் புகார் செய்யுங்கள் என்று கூறி உள்ளார். இதையடுத்து அலைந்து திரிந்து வெறுத்துப்போன வாடிக்கையாளர் நந்தகுமார், வங்கியின் ஷட்டரை இழுத்து பூட்டி வாங்கிக்குள் ஊழியர்களை சிறைவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு போலீசார் வந்து நந்தகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வங்கியை திறந்து உள்ளே இருந்த ஊழியர்களை பத்திரமாக மீட்டனர்.

இரு தரப்பினரையும் அழைத்து பேசிய எஸ்.ஐ, உங்கள் வங்கியின் கலெக்சன் ஏஜன்ட் மணிவண்ணனிடம் தான் பணம் கட்டியுள்ளார் , அதற்கு பொறுப்பு நீங்கள் தான் அதற்கு சரியான பதில் அளித்து அவருக்கு சரியான முறையில் பணத்தை பெற்று தர ஏற்பாடு செய்யுங்கள் என கூறியதோடு இது குறித்து நந்தகுமாரை காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறு அனுப்பினார்

வங்கி அதிகாரிகளும் அங்கு நின்ற சட்ட நிபுனரும், தாங்கள் ஏற்கனவே காவல் ஆய்வாளரிடம் இது தொடர்பாக புகார் அளித்திருப்பதாக தெரிவித்ததால் உக்கிரமாக இருந்த எஸ்.ஐ, சாந்தமானார்

தங்கள் பணத்தை பெற்றுக் கொண்டு இழுத்தடித்ததால், ஊழியர்களை வங்கிக்குள் வைத்து பூட்டப்பட்ட சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement