செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காதலுக்கு எச்சரிக்கை.. மாணவியின் சகோதரனை தாக்க சென்று பலியான கூட்டாளி..!

Jul 09, 2024 07:51:23 AM

திருச்சியில் கல்லூரி மாணவியை மறித்து காதலிக்க வற்புறுத்திய இருவரை மாணவியின் சகோதரர் எச்சரித்த நிலையில்,  அவரை அடிக்க ஆட்களை சேர்த்துக் கொண்டு சென்ற இடத்தில் லவ்வர் பாயின் கூட்டாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதலுக்கு வக்காலத்து வாங்கச்சென்ற இடத்தில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இளைஞரின் உறவினர்கள் சாலையில் நின்று வயிற்றில் அடித்து ஒப்பாரிவைத்த காட்சிகள் தான் இவை..!

திருச்சி லால்குடி அகலங்க நல்லூரை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது சகோதரி கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது, திருவளர்ச்சோலையை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் மறித்துள்ளார். காதலிப்பதாக மாணவியிடம் கூறி உள்ளார். அவரது கூட்டாளியான ஜீவா, நாகேந்திரன் ரொம்ப நல்ல பையன் அவன திருமணம் செய்து கொள் என்று சிபாரிசு செய்துள்ளார்.

அந்த மாணவி இதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து தனது அண்ணனிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர்களை இருவரையும் மாணவியின் சகோதரர் விக்னேஷ், அழைத்து கடுமையாக எச்சரித்து விரட்டி விட்டதாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சிறிது நேரம் கழித்து தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு விக்னேஷை தாக்க சென்றுள்ளனர்.

அங்கு தனது நண்பர்களுடன் நின்ற விக்னேஷ் தரப்புக்கும் நாகேந்திரன் தரப்புக்கும் சண்டை நடந்துள்ளது இதில் நாகேந்திரன் தரப்பை சேர்ந்த நெப்போலியன் என்ற இளைஞருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. அவர் சம்பவ இடத்தில் பலியானதால் இந்த கொலைச் சம்பவம் குறித்து விக்னேஷ் உள்ளிட்ட 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் நாகேந்திரனை வேவு பார்க்க வந்த விக்னேஷின் ஆதரவாளர்கள் என கூறப்படும் இருவரை , எதிர் தரப்பினர் கல்லால் தாக்க முயன்றனர், போலீசார் அவர்களை பிடித்துச்சென்றனர்

இதற்கிடையே இளைஞர் நெப்போலியனின் உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள் ஒப்பாரி வைத்து அழுதவாறு சாலை மறியல் போராட்டத்திலும் குதித்தனர்

தன் மகனை கொலை செய்தவர்களை சும்மா விடமாட்டேன் என்று நெப்போலியனின் தந்தை ஆவேசமாக தெரிவித்தார்

கொல்லப்பட்டவர்களும், கொலையாளிகளும் இரு வேரு சாதிகள் என்பதால் பதற்றத்தை தணிக்க 500க்கும் மேற்பட்ட போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement