செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

முருங்கைக்காய் சிப்ஸ் நாயகி வீட்டு பீரோவில் கைவைத்த பணிபெண்கள் சிக்கியது எப்படி ? சிசிடிவியில் பேசியது என்ன ?

Jul 05, 2024 07:05:11 PM

கோவையில் நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை காட்டிய பணிப்பெண்களை சிசிடிவி காட்சிகளை வைத்து பிடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

கோவை வடவள்ளி மருதநகர் பகுதியை சேர்ந்தவர் அதுல்யா ரவி. இவர் நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதுல்யா ரவியின் தாய் விஜயலட்சுமி செல்வி என்பவரை தனது வீட்டு வேலைக்காக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக விஜயலட்சுமியின் வீட்டு பீரோவில் வைத்திருந்த பணம் திருட்டுப் போனதாக தெரிகிறது. ஆனால் விஜயலட்சுமி மற்றும் அதுல்யா ரவி இருவரும் அடிக்கடி சென்னை சென்று வருவதால் கவனிக்க முடியாமல் இருந்ததாக தெரிகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் திருட்டை கண்டுபிடிக்க வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளனர். அப்போது அங்கிருந்த பணிப்பெண் மற்றும் அவரது தோழி இருவரும் சேர்ந்து விஜயலட்சுமியின் பீரோவை திறந்து உள்ளே இருந்த 2000 ரூபாய் பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியதும், பீரோவில் தாங்கள் நினைத்தது போல நிறைய பணம் இல்லை என்பது குறித்து பேசிக் கொள்ளும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகி இருந்தன.

மேலும், பீரோவில் அவர்கள் எப்போதும் நிறைய பணம் வைப்பதில்லை என்றும், இருக்கும் 2000 ரூபாயை எடுத்துக் கொள்ளலாம் என பேசிக் கொண்ட அவர்கள், பாஸ்போர்ட்டை எடுத்துச் சென்று விடுவோம், அவர்கள் அதை தேடி அலையட்டும் என்றும் கூறியது பதிவாகி இருந்தது. இவற்றைப் பார்த்த விஜயலட்சுமி வடவள்ளி போலீசில் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்தார்

புகார் அடிப்படையில் வீட்டில் வேலைப்பார்த்து வந்த செல்வி மற்றும் அவரது தோழி இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்த போது பாஸ்போர்ட்டை தாங்கள் எடுக்கவில்லை என அவர்கள் முதலில் கூறியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் பாஸ்போர்ட்டையும் திருடியதை ஒப்புக்கொண்ட செல்வி அச்சத்தில் அதனை கிழித்து வீசி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நம்பி வேலைக்கு வைத்திருந்த பணிபெண்கள் பணத்தை திருடியதுடன் பாஸ்போர்ட்டையும் கிழித்து வீசிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement