செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

குடும்ப விவகாரத்தில் பஞ்சாயத்து விசிக பிரமுகர் உயிரோடு எரிப்பு பெட்ரோல் ஊற்றி தீவைத்த உறவினர்..!

Jul 01, 2024 07:13:33 PM

உளுந்தூர் பேட்டை அடுத்த எரையூர் கிராமத்தில் நடத்தை சரியில்லை என்று மனைவியை பிரிந்து வாழ்ந்த உறவுக்கார இளைஞரை அழைத்து சேர்ந்து வாழுமாறு பஞ்சாயத்து பேசிய வி.சி.க பிரமுகரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உறவுக்காரரால் உயிரோடு பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்டதால், உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடும் விசிக பிரமுகர் சூசை நாதன் இவர் தான்..!

உளுந்தூர்பேட்டை அடுத்த எரையூர் கிராமத்தை சேர்ந்தவர் சூசை நாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்க பேரவையில் மாவட்ட அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வெளியே குடும்பத்தினருடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த உறவுக்காரரான சின்னத்தம்பி என்பவர் இவர் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகின்றது.

உடல் முழுவதும் தீ பற்றிக் கொண்டதால் உயிர் பிழைக்க அங்குமிங்கும் ஓடிய சூசை நாதனை உறவினர்கள் போர்வை மற்றும் வாலை இலைகளை போர்த்தி தீயை அணைத்தனர். அதற்குள்ளாக அவர் உடலில் பல இடங்கள் கருகியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சின்னதம்பியை பிடித்து போலீசார் விசாரித்தனர். நடத்தை சரியில்லை எனக்கூறி சின்னத்தம்பி தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், இந்த விவாகரம் தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு இருவரையும் அழைத்து சூசை நாதன் பஞ்சாயத்து பேசியதாகவும் கூறப்படுகின்றது. மனைவிக்கு பல்வேறு ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி சேர்ந்து வாழ மறுத்த சின்னத்தம்பியை, சூசை நாதன் தாக்கியதாக கூறப்படுகின்றது.

அன்று முதல் சூசை நாதன் மீது சின்னத்தம்பி ஆத்திரத்தில் சுற்றியுள்ளான். சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு சூசை நாதனை தேடி வீட்டுக்கு சென்றவனை, வீட்டில் இருந்தவர்கள் காலையில் வா என்று விரட்டி உள்ளனர். செல்வது போல அங்கிருந்து நகர்ந்தவன் இருட்டுக்குள் மறைந்திருந்ததாக கூறப்படுகின்றது . வீட்டின் வெளியே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சூசைநாதன் மீது அதிகாலை 2:45 மணியளவில் தான் கையோடு கொண்டு வந்திருந்த பெட்ரோலை சூசை நாதன் மீது ஊற்றி லைட்டரால் தீவைத்ததாக சின்னத்தம்பி வாக்கு மூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவத்தை நேரில் பார்த்த உறவினர்கள் கண்ணீர் மல்க விவரித்தனர்

குடும்ப விவகாரத்தில் பஞ்சாயத்து பேசியதால், உறவினரால் விசிக பிரமுகர் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement