செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அ.தி.மு.க பிரமுகர் கொடூரமாக வெட்டி கொலை.. பின்னணியில் ஆடு திருட்டு?

Jul 01, 2024 09:32:23 AM

கடலூரில் அ.தி.மு.க பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவர் திருட்டு ஆடுகளை வாங்கி இறைச்சி கடை நடத்தி வந்ததும், அதில் ஏற்பட்ட தகராறில் வெட்டிக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

கடலூர் வண்டிப்பாளையம் ஆலைக் காலனி பகுதியை சேர்ந்த புஷ்பநாதன், அப்பகுதியில் கசாப் கடை நடத்தி வந்தார். அ.தி.மு.க மாவட்ட பிரதிதியான இவர் கடலூர் நகராட்சியின் முன்னாள் கவுன்சிலராகவும் பதவியில் இருந்தார். சனிக்கிழமை நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது வழிமறித்த கும்பல் ஒன்று புஷ்பநாதனை முகத்தில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.

தகவலறிந்த புஷ்பநாதனின் உறவினர்கள் மற்றும் அ.தி.மு.கவினர் அப்பகுதியில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தினர். 3 தனிப்படைகளை அமைத்த போலீஸார் இது அரசியல் ரீதியான கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணையை துவங்கினர்.

ஆலைக்காலனி பகுதியைச் சேர்ந்த நேதாஜி, அஜய் மற்றும் சந்தோஷ் ஆகியோர் முன்விரோதம் காரணமாக புஷ்பநாதனை கொலை செய்தது தெரிய வரவே, தலைமறைவாக இருந்த 3 பேரையும் கைது செய்தனர் போலீஸார். அவர்கள் மூவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது.

இவர்கள் 3 பேரும் பல்வேறு பகுதிகளில் ஆடுகளைத் திருடி அதனை புஷ்பநாதனுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். குறைந்த விலைக்கு ஆடுகளை வாங்கும் புஷ்பநாதன் தான் நடத்தி வந்த கசாப் கடையில் அதனை கறியாக்கி விற்பனை செய்து வந்துள்ளார். ஆடு திருடர்கள் 3 பேரும் கடந்தாண்டு, தேவனாம்பட்டினத்திற்கு காரில் சென்று தி.மு.க பிரமுகர் ஒருவர் வீட்டில் 8 ஆடுகளை திருடினர். இதுகுறித்த வழக்கில் நேதாஜி உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்த போலீஸார் அந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

தங்களை புஷ்பநாதன் ஜாமின் எடுப்பதோடு, வாகனத்தையும் போலீஸிடமிருந்து மீட்டுத் தருவார் என அவர்கள் நினைத்திருந்ததாகவும் அது நடக்கவில்லை என கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்தவர்கள் இதுகுறித்து புஷ்பநாதனிடம் கேட்ட போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த முன்விரோதம் காரணமாகவே மதுபோதையில் இருந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து புஷ்பநாதனை வெட்டிக் கொலை செய்ததாக தெரிவித்தனர் போலீஸார்.

இதற்கிடையே நேதாஜி மற்றும் அஜயின் வீடுகளுக்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். எனவே, அப்பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement