செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ் பெர்த் டே பேபியான வழக்கறிஞரும் கைது..! போலீஸ் வாகனத்தை மறித்த ஆதரவாளர்கள்

Jul 01, 2024 06:28:37 AM

மாமல்லபுரத்தில் வழக்கறிஞர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார், பிறந்த நாள் கொண்டாடிய வழக்கறிஞரையும் கைது செய்ததால், அவரது ஆதரவாளர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

மாமல்லபுரம் அடுத்த இலந்தோப்பு பகுதியில் உள்ள ரிசார்ட்டில் சினிமா பாணியில் ரவுடிகள் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்களை அழைத்து பிறந்த நாள் கொண்டாடியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அலெக்ஸிஸ் சுதாகர் இவர் தான்..!

அலெக்ஸிஸ் சுதாகர் பிறந்த நாள் விழாவுக்கு , பிரபல ரவுடியும் போலீசாரால் தேடப்படுபவருமான சீர்காழி சத்யா என்பவர் ரேஞ்ரோவர் காரில் வந்திருப்பது அறிந்து அவரது காரை போலீசார் விரட்டினர். இதில் அவர் தனது காருடன் தப்பி செங்கல்பட்டு அடுத்த பழவேலி மலையடிவாரப் பகுதிக்குள் நுழைந்ததாகவும், போலீசார் அவரை சுற்றிவளைத்தபோது அவர் கத்தியால் தாக்கியதால், போலீசார் துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்தனர்.

இதில் சீர்காழி சத்யாவின் கால் மற்றும் தோள்பட்டையில் தோட்டாக்கள் பாய்ந்தது. அவரது கூட்டாளிகளை மடக்கிய போலீசார், காயம் அடைந்த சத்யாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சீர்காழி சத்யா மீது 5 கொலை உள்ளிட்ட 32 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், சில மாதங்களுக்கு முன்பு சத்யா பா.ஜ.கவில் தன்னை இணைத்துக் கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளை ஒரே இடத்திற்கு வரவழைத்து பிறந்த நாள் கொண்டாடிய வழக்கறிஞர் அலெக்ஸிஸ் சுதாகரையும் போலீசார் கைது செய்தனர். பொய்வழக்கு போட்டு கைது செய்யப்பட்டிருப்பதாக கூறி அவரது ஆதரவாளர்கள் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் போலீஸ் வாகனத்தை மறித்து போராட்டம் நடத்தினர்

வழக்கறிஞர் அலெக்சிஸ் சுதாகரை நீதிமன்றத்துக்குள் அழைத்து செல்ல விடாமல் போலீசாரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement