செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர்.. முதியவரைத் தூண்டிவிட்ட இடைத்தரகர்கள்.. கேள்விகளால் துளைத்தெடுத்த வட்டாட்சியர்!

Jun 29, 2024 07:07:25 AM

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் முதியவர் ஒருவரைத் தூண்டிவிட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கச் சொல்லி யோசனை கொடுத்த இடைத்தரகர்களை கேள்விகளால் துளைத்தெடுத்த வட்டாட்சியர், முதியவருக்கு பெட்ரோல் வழங்கிய பங்க்குக்கும் சீல் வைத்து அதிரடி காட்டினார்.

சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த 70 வயதான நரசிம்மன் என்பவர், டிப்டாப் உடையணிந்த சிலருடன், ஒரு லிட்டர் பெட்ரோல் பாட்டிலோடு, பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். நரசிம்மனுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கூறி, உடன் வந்த அந்த டிப் டாப் நபர்கள் முழக்கங்கள் எழுப்பினர். முதியவரும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

அப்போது வட்டாட்சியர் அலுவலக பெண் ஊழியர் ஒருவர் வந்து, தாசில்தார் இன்னும் வரவில்லை என்றும் சிறிது நேரம் கழித்து வருமாறும் அவர்களிடம் கூறினார். டிப் டாப் ஆசாமிகள் அதைப் பொருட்படுத்தாமல் அலுவலக நுழைவு வாயில் படிக்கட்டிலேயே அமர்ந்து கொண்டனர். வட்டாட்சியர் வரும் நேரம் என்பதால், வாயிலில் அமர வேண்டாம் என அப்பெண் கெஞ்சியும் அவர்கள் கேட்கவில்லை.

சிறிது நேரத்தில் அலுவலகம் வந்த வட்டாட்சியர் ஆறுமுகம், பிரச்சனை குறித்து விசாரித்தார். அப்போதுதான் நரசிம்மனுக்கு ஏற்கனவே ஓய்வூதியத்துக்கான ஆணை வந்துவிட்டது தெரியவந்தது. முதியவர் வந்து பெற்றுச் செல்லாததால் அலுவலகத்திலேயே இருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

என்ன ஏது என்று விசாரிக்காமல் எதற்காக போராட்டம், வாக்குவாதம் செய்தீர்கள் என்றும் முதியவரை தீக்குளிக்கவும் தூண்டிவிட்டீர்கள் என வட்டாட்சியர் கேட்கவே, டிப்டாப் ஆசாமிகள் திக்கித் திணறினர்.

அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தொல்லை செய்ததாக முதியவர் மீதும் அவருடன் வந்தவர்கள் மீதும் வட்டாட்சியர் காவல் நிலையத்தில் புகாரளிக்கவே, அந்த டிப் டாப் ஆசாமிகள் மூலைக்கு ஒருவராக மாயமாகினர். அத்துடன் விடாத வட்டாட்சியர், வாட்டர் பாட்டில்களில் பெட்ரோல் கொடுக்கக்கூடாது என்று தெரிந்தும் யார் உங்களுக்கு பெட்ரோல் கொடுத்தது என முதியவரிடம் வினவினார். தொடர்ந்து அந்த பெட்ரோல் பங்க்கையும் இழுத்து மூடி சீல் வைத்தார்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement