செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

யாருக்கும் பாரமில்லாமல் வாழ ஆசை 78 வயது தன்னம்பிக்கை பாட்டி ..!

Jun 24, 2024 09:44:48 PM

மதுரையில் கணவர் இறப்புக்கு பின்னர் தனது மூன்று மகன்களும் குடும்பத்துடன் கஷ்டப்படுவதால், அவர்களுக்கு பாரமாக இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய 78 வயது மூதாட்டி ஒருவர், தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்

இந்த மூதட்டிக்கு வயது 78... கைகால்களில் நடுக்கமில்லை... குரலில் பிறழ்வு இல்லை... ஓல்டு லேடியாக இருந்தாலும் தனியாக வாழும் சாத்தம்மை இவர் தான்..!

சிவகங்கை மாவட்டம் கல்லல் அடுத்த கண்டரமாணிக்கம் கிராமத்தில் பிறந்தாலும், தந்தை பெங்களூரில் பணிபுரிந்ததால், அங்குள்ள தனியார் கான்வெண்டில் 3 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்துள்ளார் சாத்தாம்மை. அந்த ஆரம்ப கல்வி தான் , குடும்பத்தை பிரிந்து தனியாக வாழும் தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது.

சாத்தம்மைக்கு கணவர் 3 ஆண்குழந்தைகள் இருந்தாலும் மதுரையில் குடும்பத்துடன் உள்ள மகன்களே கஷ்டப்படும் நிலையில் கணவர் இறப்புக்கு பின்னர் வீட்டை விட்டு வெளியேறி கோவில், தேவாலயங்களில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கு கோலமிட்டு பராமரிப்பதை வேலையாக செய்து வருகின்றார் சாத்தம்மை. அங்கு வருவோர் தரும் உணவை சாப்பிடும் அவர், தான் சாகும் வரை எவருக்கும் பாரமில்லாமல் உழைத்து வாழ்வதற்கு அரசு தேவையான உதவிகளை செய்து தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.

தனக்கு தங்குவதற்கு நிலையான வீடு இல்லாததால், ரேசன் அட்டையோ, ஆதார் அட்டையோ தன்னிடம் இல்லை என்றும் அதனால் அரசு அளிக்கும் முதியோர் உதவி தொகைகூட தன்னால் பெற இயலவில்லை என்று தெரிவிக்கும் சாத்தம்மை, தமிழக முதல் அமைச்சர் தனக்கு உதவ வேண்டும் என்று ஆங்கிலத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்

கோலப்பொடியில் எழுதி உள்ள ஆங்கில எழுத்துக்கள் வாயிலாக தனது வேண்டு கோளை முன்வைத்துள்ள சாத்தம்மை நிச்சயம் தனக்கு இறைவனும் , அரசும் தேவையான உதவியை செய்யும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்.

 


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement