செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கள்ளச்சாராய வியாபாரிக்கு குடிக்கிற பழக்கமில்லையாம்.. மெத்தானால் விஷமானது எப்படி ? ஆந்திரா டூ கருணாபுரம் ‘டெத் ரூட்’

Jun 22, 2024 07:49:47 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச்சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால், ஆந்திராவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து 3 பேரின் கை மாறி சாராயத்தில் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விழுப்புரம் எக்கியார்குப்பத்தில் விஷச்சாராயம் விற்று பலரது உயிரிழப்புக்கு காரணமான மதன்குமார் என்ற நபருக்கு இந்த சம்பவத்திலும் தொடர்பிருப்பதாக சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். 

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் தொடர்பாக சாராயவியாபாரி விஜயா, கணவர் கண்ணுகுட்டி என்கிற கோவிந்தராஜ், அவரது சகோதரன் தாமோதரன் , மெத்தனால் சப்ளை செய்த சின்னதுரை ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 17ம் தேதி புதுச்சேரியை சேர்ந்த மாதேஷ் என்ற நபரிடம் இருந்து சின்னதுரை மெத்தனாலை விலைக்கு வாங்கி, அதனை கோவிந்தராஜுக்கு விற்றுள்ளார் சின்னத்துரை.

60 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 ட்யூப்களிலும், 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 ட்யூப்களிலும், 100 சிறிய பாக்கெட்டுகளிலும் மெத்தனாலை சப்ளை செய்துள்ளார்.

கோவிந்தராஜனுக்கு குடிக்கும் பழக்கம் இல்லை என்பதாலும், தனது தம்பி தாமோதரனே எப்போதும் சிறிதளவு குடித்து பார்த்து வாங்குவார் என்பதாலும் , அவரை முதலில் மெத்தனாலை குடித்து பார்க்க கூறியுள்ளார்.

ருசி பார்த்து விட்டு மெத்தனால் கெட்டுப் போய் இருப்பதாக தாமோதரன் கூறிய நிலையில், அதற்கு சின்னதுரை, “மெத்தனால் கெட்டுப்போகவில்லை, உயர் ரக சரக்கு விற்பனை செய்யுங்கள், பார்த்துக் கொள்ளலாம்” என்று விற்றுள்ளார்.

அந்த மெத்தனாலை கோவிந்தராஜ் சாராயத்தில் கலந்ததால் மலைச்சாராயம் விஷச்சாராயமானதாக கூறப்படுகின்றது.

சின்னதுரைக்கு மெத்தனாலை விற்பனை செய்த புதுச்சேரியை சேர்ந்த மாதேஷை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

ஆந்திராவில் உள்ள சில கெமிக்கல் நிறுவனங்களில் இருந்து மெத்தனாலை அவர் வாங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சின்னதுரையுடன் சேர்ந்து சாராய வியாபரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்யும் வேலையில் ஈடுபட்ட கூட்டாளிகளான மதன் குமார் மற்றும் ஜோசப் ராஜா ஆகிய இருவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் மதன்குமார் கடந்த 2023 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் தரப்பு சட்டத்தில் சிறைக்கு சென்று சமீபத்தில் வெளியே வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.


இதுவரை ஏழு பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ள நிலையில் கல்வராயன் மலை பகுதிகளில் கள்ளச்சாராய ஊறல்களை அழிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மாதேஷ் ஆந்திராவில் எந்த நிறுவனத்திடம் இருந்து மெத்தனாலை வாங்கினார் என்பது குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement