செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அப்போம்.. சித்திரை அப்பன் தெருவிலே.. இப்போம்.. சித்திரை தாத்தா ஜெயிலிலே.. மூட நம்பிக்கையால் குழந்தை கொலை..! ஜாதகத்தை நம்பியதால் இனி.. சனிதான்..!

Jun 17, 2024 07:43:28 PM

சித்திரையில் பிறந்த பேரக்குழந்தையால் உயிருக்கு ஆபத்து என்ற மூட நம்பிக்கையால் பச்சிளம் ஆண் குழந்தையை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொலை செய்ததாக கொடூர தாத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர். பிறந்து 38 நாட்கள் ஆன குழந்தையை கொலையின் திகில் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை கிராமம் வடக்கு வெள்ளாளர் தெருவை சேர்ந்த வீரமுத்து மகள் சங்கீதா. இவருக்கும் கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் திருமணம் முடிந்து ஓராண்டுகள் ஆன நிலையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
38 நாள் ஆன ஆண் குழந்தை கடந்த 14 ஆம் தேதி இரவு மாயமானது , தேடி பார்த்த போது அந்தக்குழந்தையை துணியில் சுற்றி யாரோ குளியலறையில் உள்ள தண்ணீர் பேரளுக்குள் போட்டிருப்பது தெரியவந்தது

குழந்தையின் தந்தை பாலமுருகன் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில் , தாத்தா வீரமுத்து தான் முதலில் குழந்தையை தேட ஆரம்பித்ததாகவும், இறுதியில் குளியல் அறையில் இருந்து சடலமாக கண்டுபிடித்ததாகவும் போலீசில் தெரிவிக்கப்பட்டது

சம்பவ இடத்திற்கு வந்த ஜெயம் கொண்டம் காவல்துறையினர் இறந்த குழந்தையை கைப்பற்றி பிணக் கூறாய்விற்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு குழந்தை இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர். குழந்தை இறப்பு குறித்து தாத்தா வீரமுத்து, பாட்டி ரேவதி , பெரியம்மா அனுசியா ஆகியோரை காவல் நிலையம் அழைத்து சென்று தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

இதில் குழந்தை பிறந்ததில் இருந்தே தாத்தா வீரமுத்து கோபத்தில் இருந்தது தெரியவந்தது. வீரமுத்துவை தனியாக அழைத்துச்சென்று விசாரித்த போது குழந்தை இறப்புக்கான மர்மம் விலகியது. சித்திரை அப்பன் தெருவிலே என்ற பழமொழி போல சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்ததால் தாத்தா உயிருக்கு ஆபத்து என்றும், கடனில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படும் என்றும் ஜாதகத்தில் கூறியதால், தனது பேரக் குழந்தையை கொலை செய்ய வீரமுத்து திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று இரவு தனது மகள் தூங்கிய பின்னர் அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பேரக்குழந்தை சாத்விக்கை தூக்கிச்சென்றுள்ளார். குழந்தையின் அழுகை சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க உடல் முழுவதும் துணியை சுற்றி தண்ணீர் பேரலில் குழந்தையை மூழ்கடித்துக் கொலை செய்து விட்டு குழந்தையை தேடுவது போல் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஜாதகத்தை நம்பி பேரக்குழந்தையை கொலை செய்ததாக தாத்தா வீரமுத்துவை கைது செய்த ஜெயங்கொண்டம் காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மூட நம்பிக்கையால் பச்சிளம் குழந்தையை கொலை செய்துவிட்டு , கொலைப்பழியுடன் கம்பி எண்ணி வருகிறார் வீரமுத்து என்று போலீசார் சுட்டிகாட்டுகின்றனர்.

 


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement