செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஓடும் ரெயிலில் மது அருந்தி சி.ஆர்.பி.எஃப் போலீஸ் தொல்லை.. சங்கிலியை பிடித்து இழுத்த பயணிகள்.. நடுவழியில் இறக்கி விட்ட சம்பவம்

Jun 08, 2024 09:44:58 PM

சென்னையில் இருந்து கோவை சென்ற சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவில்லா பெட்டியில் கும்பலாக ஏறி அமர்ந்து கொண்டு மது அருந்தி பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நடுவழியில் ரெயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்.

ரெயிலில் வம்பு செய்த குண்டர்களை போலீசார் இறக்கிவிட்ட சம்பவத்தை பார்த்திருக்கிறோம், ஆனால் பயணிகளிடம் வம்பு செய்த புகாரில் மத்திய ரிசர்வ் போலீசாரை ரெயிலில் இருந்து இறக்கிவிட்ட காட்சிகள் தான் இவை..!

சென்னை சென்டரலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம் போல் நேற்று இரவு 10 மணியளவில் கோயம்புத்தூர் நோக்கி புறப்பட்டது. அப்போது ரெயில் இன்ஜின் அருகில் உள்ள முன்பதிவில்லாத பொது பெட்டியில் மத்திய ரிசர்வ் போலீசார் 10 க்கும் மேற்பட்டவர்கள் பயணம் மேற்கொண்டனர். சென்னையில் இன்டர்ன்ஷிப் பயிற்சி முடித்துவிட்டு கோயம்புத்தூருக்கு சென்ற அவர்கள் ரெயிலில் மது அருந்தி விட்டு பயணிகளுக்கு கடும் தொல்லை கொடுப்பதாக கூறி ஜோலார்பேட்டையில் சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை மற்ற பயணிகள் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

போதையில் இருந்த மத்திய ரிசர்வ் போலீசார் கழிவறை அருகே செல்லும் பயணிகளை நீங்கள் இந்த பக்கம் வரக்கூடாது என கூறி தாக்கியதாகவும், இதனை தட்டி கேட்ட பயணியை, தான் வைத்து இருந்த துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டியதாகவும் பயணிகள் குற்றஞ்சாட்டினர்.

ரெயிலில் இருந்து சக பயணிகள் அனைவரும் கிழே இறங்கி மது போதையில் ரகளையில் ஈடுபட்ட மத்திய ரிசர்வ் போலீசாரை கீழே இறக்க வேண்டும் அவர்கள் பயணம் செய்யும் ரெயிலில் நாங்கள் பயணம் செய்யமாட்டோம் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய ரிசர்வ் போலீசாரிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்கள் அனைவரையும் கிழே இறங்கினார்.

இதனால் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் அரை மணி நேரம் தாமதமாக கோயம்புத்தூர் நோக்கி புறப்பட்டு சென்றது.
ஹைதராபாத் ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மத்திய ரிசர்வ் போலீசாரை ஏற்றி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர் . இதனால் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement