செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

என் சொத்தை.. நீ எப்படி பதிவாய் ? ஆபீசுக்குள் கட்டி புரண்டு சண்டை போர்க்களமான பத்திரப்பதிவு அலுவலகம்..!

Jun 06, 2024 09:59:14 PM

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சொத்து தகராறு தொடர்பாக இரண்டு தரப்பினர் ஒருவரை ஒருவரை சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான வேலுச்சாமிக்கும் கொல்லப்பட்டியில் உள்ள 23 சென்ட் நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக ராஜேஷ் தரப்பினர் குஜிலியம்பாறை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்ததால் , இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உண்டானது

சர்ச்சைக்குரிய அந்த நிலத்தை பத்திர பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்து பத்திர பதிவு அலுவலகத்திற்குள் கடுமையாக சண்டையிட்டதால் பெண் ஊழியர்கள் பதறி ஓடினர்

இதனைக் கண்ட அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தகராறில் ஈடுபட்ட இருவரையும் விலக்கி விட்டனர்

சார்பதிவாளர் இருதரப்பையும் வெளியேற்றினார், அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த பின்னர் மீண்டும் இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்

தகவல் அறிந்து விரைந்து வந்த குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டவர்களை விலக்கி விட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு உள்ளேயே இரு தரப்பும் மோதி கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement