திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 85 பள்ளிகளுக்கு முதல் பருவத்திற்காக 1- ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையில் பயிலும் 10 ஆயிரத்து 241 மாணவ, மாணவிகளுக்கு பாடநூல்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் பல்லடம் அரசு கல்லூரியில் நடைபெற்றது.
ஆசிரியர்கள் நேரில் வந்து தங்களது பள்ளிக்கு தேவையான புத்தகங்களை சரிபார்த்து எடுத்துச்சென்றனர்.