தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள சீர்காட்சி கிராமத்தில் வின்செனட் என்பவருக்கு சொந்தமான வீட்டு வளாகத்தில் செடி நடுவதற்காக தோண்டிய குழியில் சேதமடைந்த நிலையில் 15 கிலோ எடையுள்ள ஆனந்த நடராஜர் ஐம்பொன் சிலை கண்டெடுக்கபட்டது. தகவல் அறிந்து வந்த வருவாய்த் துறையினர், சிலையை மீட்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.