செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தீபக் ராஜாவுக்கு ஸ்கெட்ச் போட்டது இவங்க தானாம் வடிவேல் முருகனுக்காக ரிவென்ஞ்..! சிறை நட்புக்காக செய்தார்களாம்..!

May 24, 2024 09:21:35 PM

தூத்துக்குடி அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெட்டிக் கொல்லப்பட்ட பக்கப்பட்டி வடிவேல் முருகன் என்பவரின் கொலைக்கு பழிக்கு பழியாகவே,  ரவுடி தீபக்ராஜாவை நெல்லையில் தீர்த்துக்கட்டியதாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லை கே.டி.சி நகர் உணவகம் முன்பு தீபக் ராஜா என்கிற தீபக் பாண்டியன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வல்லநாடு தம்பான் என்பவர் மீது ஒரு கொலை வழக்கும், மேலநத்தம் முத்து சரவணன் மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட இரண்டு வழக்குகளும் உள்ளன. ஸ்ரீவைகுண்டம் ஐயப்பன் மீது நெல்லையில் ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட இரு வழக்குகளும், முன்னீர்பள்ளம் ஐயப்பன் மீது ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட 5 வழக்குகளும் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தங்களுடன் சிறையில் இருந்த சமுதாய நண்பர் வடிவேல் முருகன் என்பவரின் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர். பக்கப்பட்டியை சேர்ந்த வடிவேல் முருகன் அந்த பகுதியில் தன் சாதி சார்ந்த நடவடிக்கையில் தீவிரம் காட்டி வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மர்மகும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

வடிவேல் முருகனின் குடும்பத்தினரின் கண்ணீருக்கு பதில் சொல்லும் விதமாக, சிறை நண்பர்களான நவீன் உள்ளிட்டோர் பழிக்கு பழிவாங்க திட்டம் தீட்டியதாக கூறப்படுகின்றது. வடிவேல் முருகன் கொலை வழக்கில் கைதான சின்னதம்பி ,அருண்குமார் , மாரிமுத்து உள்ளிடோருக்கு பின்னணியில் இருந்து உதவிகள் செய்து வந்தது தீபக்ராஜா என்பது தெரியவந்ததால் முதலில் அவரை கொலை செய்ததாக போலீசில் சிக்கியவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நவீன் உள்ளிட்ட மற்றவர்களை 16 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement