செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இப்ப இந்த பிசினஸ் தான் ஓடுது.. வீணான ஐ.டி.ஊழியரின் ராஜதந்திரம்.. லேப்டாப் பேக்கில் ரூ 1.5 கோடிக்கு கஞ்சா..! இனி சோதனை தீவிரமாக இருக்குமே..!

May 25, 2024 06:15:31 PM

சென்னை மடிப்பாக்கத்தில் இரவு பணிக்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்வதாக கூறிய ஐ.டி ஊழியரின் லேப்டாப் பேக்கை சோதனை யிட்டபோது 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பாக்கெட்டுக்கள் கைப்பற்றப்பட்டது 

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள 200 அடி ரேடியல் சாலையில் சம்பவத்தன்று மடிப்பாக்கம் தலைமை காவலர் பெரிய கருப்புசாமி என்பவர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆட்டோ ஓட்டுனர் முரளி கிருஷ்ணா தயக்கமின்றி போலீசாரிடம் பேசிய நிலையில், ஆட்டோவில் பின்புறம் அமர்ந்திருந்த ஐ.டி.ஊழியரான நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாச ராகுல் திரு திருவென விழித்தபடி பேசி உள்ளார்.

சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தான், பணி முடிந்து வருவதாக முதலில் தெரிவித்த ஸ்ரீனிவாச ராகுல் , சிறிது நேரத்தில் வெளியூர் சென்று விட்டு வருவதாக முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த தலைமை காவலர் , ஐடி ஊழியர் வைத்திருந்த லேப்டாப் பேக் மற்றும் சூட்கேஸை சோதனை செய்தார்

அதற்குள் வெள்ளை நிற டிரைபுரூட்ஸ் போல உலர்ந்த பொருள் ஒன்று பல பாக்கெட்டுகளில் இருந்தது. அதனை எடுத்து ஆய்வு செய்த போது அது உயர் ரக கஞ்சா என்பது தெரியவந்தது.
உடனடியாக ஐ.டி ஊழியர் ஸ்ரீனிவாச ராகுலை ஆட்டோவுடன் காவல் நிலையம் அழைத்துச்சென்றார் .

அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள தெரியவந்தது.

அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தெரிவித்தார் ஸ்ரீனிவாச ராகுல் . டிப்டாப் உடை அணிந்து கையில் எது வைத்திருந்தாலும் போலீசார் அதனை சோதிக்க மாட்டார்கள் என்ற அவர், போலீசார் கண்டுபிடிக்காமல் இருக்க இந்த வழியை கையில் எடுத்ததாக தெரிவித்தார்.

பல மாதங்களாக வெளி மாநிலத்திலிருந்து கஞ்சா வாங்கி வந்து சென்னையில் ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களிடம் பல மடங்கு விலைக்கு விற்று வந்த ஸ்ரீனிவாச ராகுலிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த 6 கிலோ கஞ்சாவை பரிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Advertisement
தமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதலாக 18 சதவீதம் தென்மேற்குப் பருவமழை பெய்ததாக தகவல்
திரைப்பட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சம்பள பாக்கி விவகாரம்... காவல்நிலையத்தில் வைத்து பேமண்ட் வழங்கப்பட்டது
ஈஷா யோகா மையம் வழக்கு விசாரணை... 4 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் -காவல்துறை அதிகாரிகள்
பண்ருட்டியில் இரவில் தனியாக செல்வோரிடம் செல்போன் பறித்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இருவர் கைது
மதுரை அருகே தைலம் டப்பாவை விழுங்கிய குழந்தை... லாவகமாக டப்பாவை வெளியே எடுத்த மருத்துவக் குழுவினர்
கோவையில் திமுக கனிமொழி எம்.பி. பி.ஏ.வின் தம்பி என்று கூறி மதுபோதையில் போலீசாருடன் இளைஞர் வாக்குவாதம்
அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்து விற்ற அக்கா,தங்கை.. கைது செய்த போலீஸ்
நகை வாங்குவது போல நடித்து 70 கிராம் கம்மல் திருடிய பெண்
கணவரை கொன்றவர் குடும்பத்தை பழி தீர்க்கச் சென்ற பெண்.. காவலர் என்று கூறி கூலிப்படையுடன் வீடு புகுந்து கொலை முயற்சி
மதுபான பாட்டில்களுக்கு பில் வழங்கும் சோதனை முயற்சி.. முதற்கட்டமாக 7 மதுபான கடைகளில் சோதனைப் பணி

Advertisement
Posted Oct 02, 2024 in சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்

Posted Oct 01, 2024 in சென்னை,Big Stories,

நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நீங்க நம்பலேன்னாலும் இது தாங்க நெசம் தனியாக ஓடிய பைக்..! ஷாக் காட்சிகளின் பின்னணி

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பா.ஜ.க கொடி கட்டிய காரில் சென்ற பெண்ணை மறித்து அடித்து கடத்திய கும்பல்..! கிளைமேக்ஸில் காத்திருந்த டுவிஸ்ட்..


Advertisement