செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வழிப்பறி கும்பலால் குத்திக் கொல்லப்பட்ட பீகார் இளைஞர் புலம்பெயர் தொழிலாளர்கள் ஷாக்..! செல்போன் பறிப்பில் சம்பவம்

May 16, 2024 10:47:37 AM

திருப்பூர் அருகே பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த பீகார் இளைஞர், வழிப்பறிக் கும்பலால் குத்தி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் குதித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருப்பூர் கணியாம்பூண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் குமார் 22 என்ற இளைஞர் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு பணி முடிந்து ஆகாஷ்குமார் தனது தங்கும் அறைக்கு தனியாக சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கும்பல், அவரை சுற்றிவளைத்து செல்போனை பறிக்க முயன்றது. ஆகாஷ் குமார் செல்போனை தர மறுத்ததால் மூன்று பேரும் சேர்ந்து அவரை கத்தியால் குத்தி விட்டு செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய ஆகாஷ் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஆகாஷ்குமார் புதன்கிழமை காலையில் உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த சக புலம்பெயர் தொழிலாளர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி நிறுவனத்தின் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் திருமுருகன் பூண்டி போலீசார், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்ததை தொடர்ந்து சக தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
உயிரிழந்த ஆகாஷ் குமாரின் உடல் பிணக்கூறாய்வுக்கு பின்னர் ஆத்து பாளையம் பகுதியில் உள்ள மின் மயானத்தில் உடனடியாக தகனம் செய்யப்பட்டது. இந்த கொடூர கொலை சம்பத்தில் ஈடுபட்ட வழிப்பறிக் கொள்ளையர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement