செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அரசு பேருந்தில் டிக்கெட் பெற்றும் ரூ.1500 அபராதம் தரணுமா ? செக்கர்களை தெறிக்கவிட்ட பெண்..! வச்ச இடம் மறந்து போனா பிரச்சனை தான்

May 11, 2024 01:51:34 PM

காஞ்சிபுரத்திலிருந்து திருச்சி சென்ற அரசு பேருந்தில் பயணச்சீட்டு பெற்று அதனை எங்கே வைத்தோம் என்று பெண் பயணி ஒருவர் மறந்ததால் அவரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மீண்டும் தேடிய போது டிக்கெட் கிடைத்ததால் அபராதத்தை திரும்பக்கேட்டு பெண் சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

காஞ்சிபுரத்திலிருந்து திருச்சியை நோக்கி சென்ற அரசு பேருந்தில் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கலைமணி என்பவர் தனது கணவர் மற்றும் மாமியாருடன் பயணித்தார். உளுந்தூர்பேட்டை வரை செல்ல 3 பேருக்கும் பேருந்தில் பயணச்சீட்டு பெற்ற நிலையில் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்தனர். அப்போது கலைமணி டிக்கெட்டை தேடும் போது, அவர் பெற்ற டிக்கெட் கிடைக்காததால் பயணச்சீட்டு இல்லை என கூறி மூவருக்கும் தலா 500 ரூபாய் வீதம் மொத்தம் 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது

தன்னிடம் அவ்வளவு பணமில்லை என்றதும் அவரிடம் இருந்த 500 ரூபாயை செக்கர்கள் அபராதமாக பணம் பெற்றுக் கொண்டதாகவும், அதற்கான ரசீது ஏதும் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது. கலைமணி மீண்டும் தேடிய போது தனது பையின் ஒரு பகுதியில் இருந்த பயண சீட்டு அவரது கையில் கிடைத்தது. இதையடுத்து, கலைமணி டிக்கெட் பரிசோதகரிடம் பயணச்சீட்டை காண்பித்து தான் கொடுத்த அபராத பணத்தை திரும்ப கேட்டார். ஆனால், டிக்கெட் பரிசோதகர் பணத்தை கொடுக்க மறுக்கவே, வாக்குவாதம் முற்றியது.

“டிக்கெட் எடுக்கவில்லை என்று அபராதம் விதிச்சீங்க... இப்ப டிக்கெட் கிடைச்சிருச்சி.. எங்க பணத்தை கொடுங்க”.. என்று அந்த பெண் ஆவேசமாக சண்டையிட்டார்

பேருந்து நிலையத்தில் யாசகம் பெரும் நபர் உள்ளிட்ட பயணிகள் கலைமணிக்கு ஆதரவாக பேசியதோடு, வீடியோவும் எடுத்ததால் மிரண்டு போன டிக்கெட் பரிசோதகர் அபராதமாக பெற்ற 500 ரூபாயை திருப்பி கொடுத்தார்.

அரசு பேருந்தில் பயணிப்பவர்கள் தங்களது பயணச்சீட்டுக்களை பத்திரப்படுத்தி வைப்பதாக நினைத்து , தங்களது பையில் உடனடியாக எடுக்க இயலாத இடத்தில் வைத்து விட்டு, வைத்த இடத்தை மறந்து போனால் டிக்கெட் பரிசோதகர்களிடம் அபராதமாக பணத்தை இழக்க வேண்டியது வரும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement