செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கல்லூரி மாணவனை உயிரோடு தீ வைத்து எரித்த கல்லூரிக் காதலி..! இருவரும் கருகிய நிலையில் மீட்பு

May 10, 2024 09:46:35 AM

மயிலாடுதுறையில் கல்லூரி மாணவியை 2 வருடமாக காதலித்து, ஊர் சுற்றிவிட்டு, வேறு பெண்ணுடன் நெருங்கி பழகிய காதலன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த காதலி தானும் தீக்குளித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது

மயிலாடுதுறை டவுன்ஸ்டேசன் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ், பூம்புகார் கல்லூரியில் பிகாம் படித்து வந்தார். இவரும், கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த சிந்துஜா என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சிந்துஜா மயிலாடுதுறையில் உள்ள கல்லூரியில் படித்து வந்த நிலையில் சம்பவத்தன்று இந்த காதல் ஜோடி பூம்புகார் கடற்கரைக்கு சென்று விட்டு மயிலாடுதுறைக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆகாஷ் பைக்கை நிறுத்தி சத்தம் போட்ட நிலையில் சிந்துஜா தான் ஹேண்ட் பேக்கில் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து ஆகாஷ் மீது ஊற்றி தீவைத்து விட்டு தானும் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருவரும் உடலில் பற்றி எரிந்த தீயுடன் சாலையில் ஓடினர். ஆகாஷ் அருகில் உள்ள ஆற்றை நோக்கி ஓடிய நிலையில் அங்கு தண்ணீர் இல்லாததால் அங்கேயே விழுந்தார். சிந்துஜாவின் உடலில் பற்றிய தீயை அருகில் உள்ள கடைக்காரர் போர்வையை போர்த்தி அணைத்தார்

இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் , தன்னை 2 வருடமாக காதலித்து ஊர் சுற்றிய ஆகாஷ் தற்போது வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், தான் கண்டித்ததும், அவளை மறக்க முடியாது என்று ஆகாஷ் பிடிவாதமாக கூறியதால் அவன் மீது பெட்ரோலை ஊறி தீவைத்ததாக சிந்துஜா வாக்குமூலம் அளித்தார். ஆகாஷ் தன் உடலெல்லாம் எரியுது... என்று அலறியபடியே இருந்தார்

காதலன் தன்னை ஏமாற்றி விட்டு வேறு பெண்ணுடன் பழகுவதை ஏற்றுக் கொள்ள மனமில்லாததால், முன் கூட்டியே திட்டமிட்டு ஜூஸ் பாட்டிலில் பெட்ரோலை வாங்கி கையோடு எடுத்துச்சென்ற சிந்துஜா, ஆகாஷ் பைக்கில் அமர்ந்திருந்த போது எதிர்பாராத நேரத்தில் அவன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்ததாகவும், அவனால் உடனடியாக தப்பிச்செல்ல இயலவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement