செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இல்லறத்துக்கு நள்ளிரவு பூஜை அந்தரத்தில் பறந்த எலுமிச்சை பணத்துடன் மந்திரவாதி ஓட்டம்..! வாழ்க்கையே போச்சிங்க... பெண் ஆவேசம்

May 10, 2024 09:47:14 AM

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணவனுடன் சேர்ந்து வாழ மாந்த்ரீக பூஜை செய்வதாக கூறி பெண்ணை ஆபாசப்படம் எடுத்த போலி மந்திரவாதி ஒன்றரை லட்சம்  ரூபாய் பணத்துடன் தலைமறைவாகி விட்டதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்

குழந்தைகள் இல்லையா.. கணவன் மனைவி பிரச்சனையா... கடன் தொல்லையா.. இப்படி சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்வதாக கூறி எலுமிச்சை பழத்தை பறக்க வைத்து, பணம் பறித்த புகாருக்குள்ளாகி இருக்கும் மந்திரவாதி அர்ஜுன் கிருஷ்ணன் இவர் தான்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சத்யா என்ற பெண் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தங்கி தனியார் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். குடும்ப பிரச்சனையால் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் இவர், தனது கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் கேரள மாந்திரீகம் என்ற youtube சேனலில் வீடியோ வை பார்த்து, பல்லடம் அருகே பணிக்கம்பட்டியில் உள்ள அர்ஜுன் கிருஷ்ணனின் வராகி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

பரிகாரங்கள் செய்தால் பிரிந்து வாழும் கணவனுடன் சேர்த்து வைப்பதாக கூறி முதலில் பத்தாயிரம் ரூபாயும், சிறிது நாட்கள் கழித்து அதிகம் செலவாகும் எனக்கூறி ஒன்றரை லட்சம் ரூபாயும் சத்தியாவிடம் பெற்றுள்ளார் அர்ஜுன் கிருஷ்ணன். கணவனுடன் சேர வேண்டும் என்ற ஆசையில் தனது சக ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி ஒன்றை லட்சம் ரூபாயை மந்திரவாதியிடம் சத்யா கொடுத்ததாக கூறப்படுகின்றது.

பணத்தை பெற்றுக் கொண்டு எந்த பூஜைகளையும் செய்யாமல் அலைக்கழித்ததால், பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார் சத்யா. தனது வீட்டிற்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அழைத்த அர்ஜூன் கிருஷ்ணன், அங்கு வைத்து சத்யாவிடம் அத்துமீறலில் ஈடுபட்டு அதனை வீடியோவாக எடுத்ததாகவும், அந்த வீடியோவை தனது youtube சேனலில் வெளியிடுவேன் என மிரட்டியதாகவும், பாதிக்கப்பட்ட சத்யா திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தன்னைப் போன்று 50க்கும் மேற்பட்டோர் இதுபோல சாமியார் அர்ஜுன் கிருஷ்ணனால் ஏமாற்றப்பட்டுள்ளனர் எனவும், தனது பணத்தை தராவிட்டால் சாமியாரின் கோயில் முன்பு தீக்குளித்து உயிர் துறப்பேன் எனவும் பாதிக்கப்பட்ட பெண் சத்யா ஆவேசமாக தெரிவித்தார்

பிடிவாதத்தை கைவிட்டு கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசி, ஒருவர் தவறை மற்றொருவர் மன்னித்து ஏற்றுக் கொண்டாலே இது போன்ற மந்திரவாதிகளை நாடவேண்டிய அவசியம் இருக்காது என்கிறார்கள் காவல்துறையினர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement