செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இரயிலிலிருந்து தவறி விழுந்து பலியான கர்ப்பிணி வளைகாப்புக்காகச் சென்றபோது சோகம்

May 03, 2024 06:14:02 PM

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்தார். அபாயச் சங்கிலியை இழுத்தும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் ரயில் நிற்காமல் சென்றதாக உறவினர்கள் கதறி அழுதனர். 

வியாழக்கிழமை இரவு சென்னையிலிருந்து சென்ற கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சங்கரன்கோயிலுக்கு குடும்பத்துடன் சென்ற கஸ்தூரி என்ற பெண் கர்ப்பமாக இருந்ததால் அடிக்கடி வாந்தி எடுத்தவாறே சென்றுள்ளார். விருத்தாசலம் அடுத்த பூவனூர் அருகே சென்றபோது வாந்தி எடுப்பதற்காக வாஷ் பேசின் அருகே சென்ற கஸ்தூரி, எதிர்பாராதவிதமாகத் தடுமாறி படிக்கட்டு வழியே கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அந்தப் பெட்டியிலிருந்த அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்துள்ளனர். ஆனால் ரயில் நிற்கவில்லை என்று கூறப்படும் நிலையில், அடுத்த பெட்டிக்கு ஓடிச் சென்று சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். அதற்குள் ரயில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து விட்டதாகக் கூறப்படுகிறது. ரயிலை விட்டு இறங்கி நீண்ட நேரம் தேடியும் இருட்டாக இருந்ததால் கஸ்தூரியை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து ரயில் விருத்தாசலம் புறப்பட்டுச் சென்றது. தகவல் அறிந்ததும் உடனடியாகத் தேடும் பணியில் இறங்கிய ரயில்வே போலீசார் சுமார் 3 மணி நேர தேடலுக்குப் பிறகு உளுந்தூர்பேட்டையை அடுத்த பூ மாம்பாக்கத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த கஸ்தூரியின் உடலை கைப்பற்றினர். வரும் ஞாயிற்றுக்கிழமை கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்துவதற்காக அழைத்துச் சென்றதாகக் கூறிய உறவினர்கள், அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்ததும் ரயில் நின்றிருந்தால் தங்களது மகளைக் காப்பாற்றி இருக்கலாம் என கதறி அழுதனர்.

இதனிடையே விரைவு ரயிலில் அபாயச் சங்கிலி செயல்படவில்லை என்ற புகார் குறித்து விசாரணைக்கு தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. கொல்லம் ரயிலில் உள்ள அபாயச் சங்கிலியை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement