செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கோவையில் ரூ 2 கோடி.. துபாய் ஓட்டலில் தில்லாலங்கடி சீட்டிங் லேடியை மடக்கிய மக்கள்..! டிசைன் டிசைனாக மோசடிங்கோ..!

May 02, 2024 07:46:36 AM

அதிகவட்டி தருவதாக ஆசைக்காட்டி 2 கோடி ரூபாயுடன் துபாய்க்கு தப்பிச்சென்ற கோவையை சேர்ந்த இளம் பெண், அங்குள்ள ஓட்டல்களில் இளைஞர்களை மிரட்டி பணம் பறித்த புகாரால், இந்தியாவுக்கு தப்பி வந்த போது பாதிக்கப்பட்டவர்களிடம் வசமாக சிக்கினார்.

கோவை பன்னிமடையை சேர்ந்த பங்கு வர்த்தகரான மதுமிதா தன்னிடம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதந்தோறும் 20 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு பணம் தருவதாகவும் வருடத்தின் முடிவின் முதலீடு செய்த 1 லட்சம் ரூபாயையும் திருப்பி தந்துவிடுவதாகவும் ஆசை வார்த்தை கூறி 2 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு பெற்றதாக கூறப்படுகிறது.

ஒரு சில மாதங்கள் மட்டும் சொன்னபடி பணத்தை கொடுத்து விட்டு பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்த மொத்த பணமும் நட்டம் அடைந்து விட்டதாக கூறி பணம் கொடுக்க மறுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில் 2 கோடி ரூபாய் மோசடி பணத்துடன் மதுமிதா துபாய்க்கு தப்பிச்சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.

துபாயில் இருந்தபடியே சிலரிடம் பங்கு வர்த்தகம் செய்வதாக கூறி ஆன் லைன் மூலமாகவும் சில லட்சங்களை வாங்கி மோசடி செய்துள்ளார். திடீரென அவர் அங்கிருந்து விமானம் மூலம் எர்ணாகுளம் வருவதாக பணம் கட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல் வந்துள்ளது. அதன்படி எர்ணாகுளத்தில் பணம் கட்டி ஏமாந்த ஒருவர் மதுமிதாவை மடக்கிப்பிடித்து தனது காரில் ஏற்றி கோவைக்கு அழைத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இரவு நேரம் என்பதால் அவரை காவல் நிலையத்தில் அனுமதிக்க மருத்து விட்டனர்

காலையில் வரச்சொன்னதால், விடிய விடிய மதுமிதாவுடன் காத்திருந்த பாதிக்கப்பட்டவர்கள் அவரை காலையில் மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர், அவரிடம் நடத்திய விசாரணையில் தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்றும் எல்லா பணமும் நட்டம் ஆகி விட்டது என்றும் சொன்னதையே கூறியுள்ளார்

துபாயில் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் மதுமிதா அங்குள்ள ஓட்டல்களில் செய்த பிளாக் மெயில் பணம் பறிப்பு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. ஓட்டலுக்கு வரும் இளைஞர்களிடம் நட்பு கொள்ளும் மதுமிதா அவர்களுக்கு தனது ஆபாச புகை படங்களை அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டுவதை வாடிக்கையாக செய்து வந்ததாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞர் , அங்குள்ள போலீசில் புகார் அளிக்க இருப்பதாக கூறியதால் அங்கிருந்து இரவோடு இரவாக தப்பி இந்தியாவுக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகின்றது.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement