செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஏற்காடு மலைப்பாதையில் அதிவேகம் தலைகுப்புற பாய்ந்த தனியார் பேருந்து சிதறி விழுந்த பயணிகள் பலியான சோகம்

May 01, 2024 11:51:52 AM

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 70 பயணிகளுடன் மலைப்பாதையில் வேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று 13-வது கொண்டை ஊசி வளைவில் தறிகெட்டு ஓடி தலைக்குப்புற பாய்ந்ததில் அதில் பயணித்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து நேற்று மாலை 5:30 மணிக்கு முத்து என்ற தனியார் பேருந்து சேலம் பேருந்து நிலையம் நோக்கி புறப்பட்டது.

பேருந்தில் 70க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்த நிலையில், மலைப்பாதையில் பேருந்து வேகமாக சென்றதாக கூறப்படுகின்றது.

13 வது கொண்டை ஊசி வளைவில் வந்த போது தறிகெட்டு ஓடிய பேருந்து அங்கிருந்து 100 அடிக்கு கீழ் நோக்கி தலைகுப்புற பாய்ந்து 11-வது கொண்டை ஊசி வளைவு சாலையில் மோதி செங்குத்தாக நின்றது

பேருந்து பாய்ந்த வேகத்தில் பயணிகள் பலர் தூக்கி வீசப்பட்டனர்.

சாலையில் விழுந்தவர்கள் எழுந்திருக்க இயலாமல் அலறினர். பலருக்கு கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது

அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். காயம் அடைந்த 65 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கோர விபத்தில் சேலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கார்த்திக், ஹரிராம், மாது, குமார், திருச்செங்கோடு முனீஸ்வரன் அகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்

பேருந்து ஓட்டுனர் அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றிக் கொண்டு மலைப்பாதையில் அதிவேகமாக இறங்கியதால் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக தெரிவித்த போலீசார் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement