செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஊரைவிட்டு தள்ளி வைத்த பால்கட்டளை நாட்டாமைகள் கும்பிட்டு விழ வைத்து அபராதம்..! கலெக்டரிடம் புகார் தெரிவித்த குடும்பம்

Apr 30, 2024 04:31:35 PM

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே பால்கட்டளை கிராமத்தில் ஊர் பேச்சை கேட்காததால் விவசாயியின் குடும்பத்தை ஊரைவிட்டு தள்ளி வைத்த நிலையில், அவருடன் பேசிய சகோதரரை ஊரார் முன்பு கும்பிட்டு விழவைத்து அபராதம் விதித்ததாக புகார் எழுந்துள்ளது 


நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே பால் கட்டளை வடக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி நாராயணன். கடந்த ஆறு மாதமாக தனது குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக கூறி நாராயணன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு மனு ஒன்றை அளித்தார்

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சுமார் இரண்டரை ஏக்கர் கோயில் நிலத்தை குத்தகைக்கு பெற்று பயிர் செய்து வரும் நிலையில் அந்த நிலத்தை ஊருக்கு தரும்படி கேட்டு தான் கொடுக்க மறுத்ததால் தனது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து ஊர் நாட்டாமை இளையராஜா உத்தரவிட்டதாக தெரிவித்தார் நாராயணன் .

மேலும் தன்னிடம் பேசினால் அவர்களையும் ஊரை விட்டு ஒதுக்கும்படியும் அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும்படியும் கூறியதால் தன்னிடம் பேசிய 3 பேர் குடும்பத்தையும் தற்போது ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதால் தங்களிடம் யாரும் பேசுவதில்லை என்றும் விவசாய வேலைக்குக்கூட ஆட்கள் வருவதில்லை என்றார் நாராயணன்.

தன்னிடம் பேசியதால் சகோதரரை ஊரார் முன்பு கும்பிட்டு விழ வைத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட பின்னரே ஊருக்குள் சேர்த்துக் கொண்டதாக கூறி வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார்

தங்கள் குழந்தைகளிடம் கூட யாரையும் பேச விடுவதில்லை என்று பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார்

இது குறித்து விளக்கம் அளித்த காவல்துறையினர், பிரச்சனைக்குரிய அந்த இடத்தை முதலில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஊருக்காக வாங்க முடிவு செய்ததாகவும், நாராயணன் முதல் ஆளாக முந்திக்கொண்டு யாருக்கும் தெரியாமல் தனிப்பட்ட முறையில் அந்த நிலத்தை குத்தகைக்கு வாங்கியதால் ஆத்திரமடைந்த ஊர் நிர்வாகிகள் நாராயணனை எந்த நிகழ்விலும் சேர்த்துக் கொள்ளவில்லை என்றும் மற்றபடி கடையில் பொருட்கள் வாங்கவோ, தண்ணீர் பிடிக்கவோ ஊர் தலைவர்கள் தடை விதிக்கவில்லை என தெரிவித்தனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement