செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

100 ஏக்கர் நிலத்தை பிரித்துத் தரக்கேட்டு தாக்கியதாக கைதான மகன் வாக்குமூலம்..! பெண் அதிகாரியை ஆலைக்குள் சிறைவைத்தவர்

Apr 27, 2024 11:28:12 AM

100 ஏக்கர் சொத்துக்காக தந்தை மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வெளியானதால் 2 மாதம் கழித்து மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை மறைத்த உதவி காவல் ஆய்வாளர் பழனிச்சாமி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஏ.டி.எஸ்.பி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் மார்டன் அரிசி ஆலையுடன் கூடிய பங்களா வீட்டில் வசித்து வந்தவர் குழந்தைவேலு. சேலம் ஆத்தூர் அருகே 100 ஏக்கர் நிலமும், சேகோ பேக்டரி என்றழைக்கப்படும் ஜவ்வரிசி தொழிற்சாலையும் இவருக்கு சொந்தமாக உள்ளது.

குழந்தைவேலுவுக்கு சங்கவி என்ற மகளும் சக்திவேலு என்கிற மகனும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமான நிலையில் சக்திவேலு சேகோ பேக்டரியை கவனித்து வந்துள்ளார். வீட்டின் வரவு செலவுகள் அனைத்தும் குழந்தைவேலுவின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. இதனால் தேவைக்கு பணம் எடுக்க இயலாமல் மன உளைச்சலில் இருந்த சக்திவேலு தான் தனியாக தொழில் செய்ய விரும்புவதால் சொத்துக்களை பிரித்து தரக்கேட்டுள்ளார். இதற்கு குழந்தைவேலு சம்மதிக்காததால் தந்தை மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே பிப்ரவரி 16ஆம் தேதி தந்தை குழந்தை வேலுவை கடுமையாக தாக்கி உள்ளார் மகன் சக்திவேலு.

அவரை மீட்டு காரில் ஏற்றி சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோதும் தாக்கியதாக கூறப்படுகின்றது.

வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொடுத்து குழந்தைவேலுவின் மனைவி ஹேமா கைகளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னையும் பேரன் சக்திவேல் தாக்க வருவதாக குழந்தைவேலுவின் தந்தை அத்தியப்பனும் ஒரு புகார் அளித்துள்ளார். புகார்களை விசாரித்த டி.எஸ்.பி தனசேகரன், காவல் ஆய்வாளர் பாலாஜி, உதவி ஆய்வாளர் பழனிச்சாமி ஆகியோர், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் வழக்கை கிடப்பில் போட்டுள்ளனர்.

திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து திரும்பிய குழந்தை வேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த தாக்குதல் சம்பவத்தை தந்தை மகன் விவகாரம் என்று, இருதரப்பிலும் எழுதி வாங்கிக் கொண்டு காவல் நிலையத்தில் பஞ்சாயத்து பேசி முடித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.

தேர்தலுக்கு முந்தின நாள் 18ந்தேதி காலையில் வீட்டின் படுக்கை அறையில் குழந்தைவேலு கட்டிலில் இருந்து விழுந்து மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகவும், கதவை உடைத்து சடலத்தை மீட்ட உறவினர்கள் அவரது சடலத்தை உடனடியாக அடக்கம் செய்ததாகவும் கூறப்படுகின்றது.

தாக்குதல் சம்பவத்தில் எந்த ஒரு சட்டபூர்வ விசாரணையும் மேற்கொள்ளாத டி.எஸ்.பி தனசேகரன், கை.களத்தூர் காவல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ள பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி, தாக்குதல் வழக்கை முறையாக விசாரிக்காத எஸ்.ஐ பழனிச்சாமியை ஆயுதப்படைக்கு மாற்றியதுடன் அவர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளவும் ஏ.டி.எஸ்.பிக்கு உத்தரவிட்டார். இதற்கிடையே தாக்குதல் வீடியோ வெளியானதை தொடர்ந்து தாக்குதல் சம்பவத்தின் போது தடுத்த பணியாளரிடம் புகார் பெற்று சக்திவேலுவை எஸ்.பியின் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சக்திவேலு மீது 10 வருடத்துக்கு முன்பு சேகோ ஆலையில் ஆய்வுக்கு வந்த உணவுப்பொருள் பாதுகாப்பு பெண் அதிகாரியை சிறைவைத்த வழக்கும், ஆலையின் மேலாளரை தாக்கியதாக ஒரு வழக்கும் உள்ளது. ஹைடெக் வாழ்க்கை வாழ்வதற்கு இடையூறாக இருந்த தந்தை சொத்துக்களை பிரித்து தர மறுத்ததால் ஆத்திரத்தில் தாக்கியதாக சக்திவேலு வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement