செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மாந்தோப்பில் மலர்ந்த காதல் தலையை முறித்த கணவன்..! காதலிக்காக துப்பாக்கிச்சூடு..! டுவிஸ்ட்டுகளால் திகைத்து நின்ற போலீசார்

Apr 25, 2024 06:15:42 PM

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சேர்ந்து வாழ மறுத்த மனைவியின் வயிற்றை கத்தியால் கிழித்தும், கழுத்தை முறித்தும் கொன்ற கொடூரக் கணவனை தூப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வெள்ளாளபட்டியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு கல்லாவி அருகே 4 ஏக்கரில் மாந்தோப்பு உள்ளது. இந்த தோப்பின் காவலுக்கு சீதை என்ற குருவிக்கார பெண்ணின் குடும்பத்தை, பிரகாஷ் பணிக்கு அமர்த்தி உள்ளார். சீதை கணவரை பிரிந்து வாழ்ந்துவந்த நிலையில் 2 ஆண்டுகள் கழித்து சம்பவத்ன்று மனைவியை தேடி கணவன் சின்னமுத்து மாந்தோப்புக்கு சென்றுள்ளார். அவருடன் உறவினர்களான ராம்குமாரும், அரசு என்பவரும் சென்றுள்ளனர்.

வீட்டுக்குள் பச்சிளம் கைக்குழந்தையுடன் இருந்த மனைவியை கண்டதும் ஆத்திரம் அடைந்த சின்னமுத்து, 2 வருடம் பிரிந்து வாழ்ந்த நிலையில் இந்த குழந்தை யாருக்கு பிறந்தது? எனக்கேட்டு தகராறு செய்தாக கூறப்படுகிறது. தன்னுடன் சேர்ந்துவாழ வருமாறும் அழைத்துள்ளார். வரமறுத்ததால் சீதையை கத்தியால் குத்தி வயிற்றை கிழித்து குடலை உருவிய பின்னரும் சீதை உயிருடன் இருந்ததால் அவரது கழுத்தை முறித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளதாக, சொல்லப்படுகிறது.

சத்தம் கேட்டு அங்கு வந்த தோப்பு உரிமையாளர் பிரகாஷ், பறவைகளை விரட்ட பயன்படுத்தப்படும் துப்பாக்கியை எடுத்து வந்து பால்ரஸ் குண்டுகளை போட்டு சுடத்தொடங்கி உள்ளார். துப்பாக்கியை கண்டதும் சின்னமுத்துவும், கூட்டாளிகளும் தப்பி ஓடியுள்ளனர். சின்னமுத்துவை விரட்டி விரட்டி சுட்டதால் அவரது முதுகில் பல இடங்களில் பால்ரஸ் குண்டுகள் பாய்ந்தன.

குண்டுகாயத்துடன் மருத்துவமனையில் சின்னமுத்து சிகிச்சைக்காக சேர்ந்ததால் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர். தோப்பு உரிமையாளர் பிரகாஷ் தன்னை துப்பாக்கியால் சுட்டதாக சின்னமுத்து வாக்குமூலம் அளித்த நிலையில், பிரகாஷை பிடித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

தோப்பு காவலாளியான சீதையுடன் தனக்கு தவறான தொடர்பு இருந்ததாகவும், அதில் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததாகவும் தெரிவித்த பிரகாஷ், தனக்கு பெண் குழந்தை இல்லாததால் அவரை வெளியே அனுப்பாமல் தோப்பு வீட்டிலேயே வைத்து குடித்தனம் நடத்தி வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சின்னமுத்து உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து சீதையை கொன்றதால் தாங்க முடியாத ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டதாக பிரகாஷ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இரு வேறு வழக்குகள் பதிவு செய்து பிரகாஷ், ராம்குமார், அரசு ஆகிய 3 பேரையும் கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சின்னமுத்து சிகிச்சைக்கு பின்னர் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.


Advertisement
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement