செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

“சின்ன வயசு காதல் சார்.. எனக்கு வேற வழி தெரியல அதான் இப்படி பண்ணிட்டேன்”

Apr 24, 2024 09:47:26 AM

திருச்சி சோமரசம் பேட்டை அருகே தாய்மாமன் மகளை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த தாயை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தாக்கியதாக நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர்

திருச்சி சோமரசம்பேட்டை வாசன் சிட்டியை சேர்ந்தவர் லிங்கம் , இவரது மனைவி கொடிமலர். இவர்கள் பழக்கடை நடத்தி வருகின்றனர். இவர்களது மகன் ராஜகுமாரன் பாத்திரக்கடையில் சூப்பர்வைசராக வேலைப்பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று காலை 6 மணிக்கு லிங்கம், தனது பழக்கடைக்கு தேவையான பழங்களை வாங்க மார்க்கெட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தபோது மனைவி கொடிமலர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காயம்பட்ட மனைவியை மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு கொடிமலரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மர்மநபர்கள் கத்தியால் தாக்கி கொடிமலரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை முன்னெடுத்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடிமலரின் மகன் ராஜகுமாரன் தாயுடன் ஏற்பட்ட தகராறில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும், அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியதும் தெரியவந்தது.

இதனால், தாயின் இறுதிச்சடங்கில் அழுதபடியே பங்கேற்ற அவரது மகன் ராஜகுமாரனை பிடித்து போலீசார் விசாரித்தபோது கொலைக்கான மர்மம் விலகியது. சிறுவயதில் இருந்தே ராஜகுமாரன் தனது தாய்மாமன் மகளை தீவிரமாக காதலித்து வந்ததாகவும் அதற்கு தாய் கொடிமலர் எதிர்ப்பு தெரிவித்ததால், தான் விஷம் அருந்தியதாகவும் அதன் பின்னரும் தனது காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் தாய் மீது கோபத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளார் ராஜகுமாரன்.

தனது காதலியை மணப்பதற்கு இடையூறாக இருக்கும் தாயை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு சம்பவத்தன்று கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் , அவர் இறந்தது உறுதியானதும் தான் வீட்டை விட்டு வெளியேறி ஒன்றுமே தெரியாதது போல அழுது நடித்ததாகவும் ராஜகுமாரன் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து ராஜகுமாரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement