செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சித்தப்பா மீது பெட்ரோல் ஊற்றி லைட்டரால் தீ வைப்பு.. பாதைத் தகராறில் விபரீதம்..!

Apr 22, 2024 08:23:16 AM

விவசாய நிலத்திற்கு வழிவிடும் தகராறில் சித்தப்பா மீது பெட்ரோல் ஊற்றி ஓட ஓட விரட்டி லைட்டரால் தீ பற்ற வைத்த இளைஞரை காவேரிப்பட்டினம் போலீஸார் கைது செய்தனர்.

தன் மீது பெட்ரோல் ஊற்றி லைட்டரால் தீ பற்ற வைக்க முயலும் அண்ணன் மகனிடமிருந்து கடைக்காரர் தப்பி ஓட முயற்சிக்கும் காட்சிகளே இவை.

ஓட, ஓட விரட்டிச் சென்று லைட்டரால் தீ வைத்து விட்டு எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் அந்த இளைஞர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னவன். இவருக்கும் அவரது அண்ணன் மணி குடும்பத்திற்கும் கடந்த சில ஆண்டுகளாகவே நிலப் பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது. தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று, நெல் அறுவடைக்காக தனது நிலம் வழியாக அண்ணன் மகன் செந்தில் கொண்டுச் சென்ற அறுவடை இயந்திரத்தை தடுத்துள்ளார் சின்னவன்.

அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறு இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பாக மாறவே, செந்திலின் தாய் ராணி காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். சின்னவன் உட்பட அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அவர்கள் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காவேரிப்பட்டிணத்தில் தான் நடத்தி வரும் மாட்டு தீவன கடையில் அமர்ந்திருந்தார் சின்னவன். இதனைப் பார்த்த செந்தில் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தான் ஏற்கனவே கேனில் எடுத்துச் சென்ற பெட்ரோலை அவர் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது.

அவரிடமிருந்து தப்பிக்க சின்னவன் அங்கும் இங்கும் ஓடிய நிலையிலும் விடாமல் துரத்திய செந்தில் அவரை பிடித்து வைத்துக் கொண்டு லைட்டரால் தீயை பற்ற வைத்தார்.
உடலில், தீப்பற்றி எரியவே அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறிது நேரம் அங்கேயே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த செந்தில் அதன்பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

பேருந்து நிலையத்தில் சுற்றிக் கொண்டிருந்த செந்திலை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement