செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தமிழகத்தில் ஜனநாயக கடமையாற்றிய மூத்த குடிமக்கள்

Apr 19, 2024 06:01:45 PM

நாகப்பட்டினம் மாவட்டம் வாழ்மங்கலம் கிராம வாக்குச்சாவடியில் காமாட்சி என்ற 101 வயதுப் பெண் வாக்களித்தார்.

புதுச்சேரியில் வசித்து வரும் தாம் வாக்களிப்பதற்காகவே பிறந்த ஊருக்கு வந்ததாகவும், அதுவும் தாம் படித்த பள்ளியிலேயே வாக்களித்ததாகவும் காமாட்சி கூறினார்.

நாகையில் வாக்களித்த 101 வயது பெண்ணான காமாட்சி

சத்தியமங்கலம் அருகே ரங்கசமுத்திரம் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாப்பம்மாள் என்ற 99 வயது பெண் தள்ளாடியபடி நடந்து சென்று வாக்கினை பதிவு செய்தார்.

நாகர்கோவில் அருகே வடிவீஸ்வரம் வாக்குச்சாவடியில் 95 வயதான முத்தம்மாள் என்ற பெண் தனது உறவினர்களுடன் சென்றுவாக்களித்தார்.

சிவகாசி காரனேஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்திற்கு தவழ்ந்தபடி சென்ற 85 வயது பெண் அன்னலட்சுமியை காவலர்கள் வீல் சேரில் அமர்த்தி அழைத்துச் சென்று வாக்களிக்கச் செய்தனர்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் வயது முதிர்ந்த பலர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். கோவில்பட்டி அருகே கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் 88 வயது மூதாட்டி ராமலட்சுமி என்பவர் வாக்களித்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம், சுகுணாபுரம் பகுதியில் மூதாட்டி குர்ஷித் பீவி என்பவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால், வாக்களிக்க அனுமதிக்கப்படாத நிலையில், தனக்கு வாக்குரிமை கிடைக்கவில்லை என வருந்தினார்.

கரூர் மாவட்டம், சின்னாண்டான் கோவில் சாலையில் உள்ள தனியார்பள்ளி வாக்குச்சாவடியில் கைத்தடி ஊன்றியபடி வந்த 93 வயதான மூதாட்டி ஒருவர் தனது குடும்பத்தினர் உதவியுடன் வாக்களித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறையில் உள்ள குமரகுருபரர் பள்ளியில் 90 வயதான ரங்கம்மா என்ற மூதாட்டி நடக்க முடியாத நிலையிலும், சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement