இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 800 வாக்குச்சாவடி மையங்களில் 217 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தெரிவித்துள்ளார்.
மூவாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பதால், மக்கள் அச்சமின்றி வாக்களிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.