தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே, கூட்டுப் பட்டாவில் இருந்து தனிப் பட்டா வழங்க பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட புகாரில் சேந்தமரம் கிராம நிர்வாக அலுவலர் மாடசாமியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
பட்டா கேட்டு விண்ணப்பித்த மதன் என்பவர் கொடுத்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மாடசாமி வாங்கியபோது கையும் களவுமாக பிடித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.