செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காதலை கைவிட மறுப்பு... கோபத்தில் அடித்த தந்தை.. சடலமாகி விழுந்த மகள்... படிக்கும் வயதில் வேண்டாமே...

Mar 18, 2024 07:28:08 AM

படிக்கும் வயதில் காதல் வேண்டாம் என கூறியும் ஏற்க மறுத்ததால் கோபத்தில் அடித்ததில் உயிரிழந்த 16 வயது மகள் சடலத்தை டூவீலரில் தூக்கிச் சென்று 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஏரியில் தந்தை வீசிச் சென்ற சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்தேறி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பட்டவாரப்பள்ளியை சேர்ந்தவர் பிரகாஷ். கடந்த 14-ம் தேதி காலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற தனது 16 வயது மகள் வீடு திரும்பவில்லை என பாகலூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார் பிரகாஷ்.

இந்நிலையில், 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஏரி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார் அந்த சிறுமி.

தேடப்பட்டு வந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டதால் அவரது வீட்டிலிருந்தே விசாரணையை துவங்கினர் போலீஸார். அப்பகுதியில் வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி பதிவுகளை கைப்பற்றிய போலீஸாருக்கு பிரகாஷ் துணியால் மூடப்பட்ட ஒரு பொருளை தனது மனைவியோடு சேர்ந்து டூவீலரில் எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பிரகாசும் அவரது மனைவி காமாட்சியும் பதிலளிக்கவே விசாரணையை தீவிரப்படுத்தினர் போலீஸார். அதில், மகளை பெற்றோரே அடித்து கொலை செய்து ஏரியில் வீசியது தெரிய வந்தது.

கடந்த 2022-ம் ஆண்டு மாணவியை ஆசை வார்த்தை கூறி பக்கத்து ஊரான முத்தாலியை சேர்ந்த சிவா என்ற 23 வயது நபர் அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிவா கைது செய்யப்பட்டார்.

அண்மையில், ஜாமீனில் வெளியே வந்த சிவாவை மாணவி சென்று சந்தித்தது பிரகாசிற்கு தெரிய வந்துள்ளது. நன்றாக படிக்கும் தனது மகளுக்கு இந்த வயதில் காதல் தேவையில்லை என புத்திமதி கூறியுள்ளார் பிரகாஷ். தாய் மற்றும் பெரியம்மா மீனாட்சியும் புத்தி கூறியும் மாணவி கேட்கவில்லை என கூறப்படுகிறது.

அறிவுரையை உதாசீனப்படுத்தியதால் கோபத்தில் மகளை பிரகாஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், மரக்கட்டிலில் தலை மோதியதில் மாணவி அதே இடத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கோபத்தில் செய்த செயலலால் மகள் உயிரிழக்கவே, சடலத்தை துணியில் கட்டி தனது மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்று ஏரியில் வீசியது விசாரணையில் தெரிய வந்ததாக தெரிவித்தனர் போலீஸார்.

மகளை கொலை செய்ததாக தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி, சிறுமியின் பெரியம்மா மீனாட்சி ஆகியோரை கைது செய்தனர் போலீஸார்.

படிக்கும் வயதில் ஏற்பட்ட காதலால் மகளை இழந்ததோடு பெற்றோரே குற்றவாளியாகி இருப்பது உறவினர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement