செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

போதை கடத்தல் மன்னன் ஜாபர் சிக்கியது எப்படி ? பணம் பெற்ற பிரமுகர்கள் கிலி..! அதிகாரி வெளியிட்ட பரபரப்பு தகவல்

Mar 09, 2024 08:24:47 PM

போதை கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போதை கடத்தலில் கிடைத்த பணத்தை வைத்து அவர் என்ன வெல்லாம் செய்தார் என்பது குறித்தும் , அவருடன் தொடர்புடையவர்கள் குறித்தும் மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்

2000 ஆயிரம் கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் வழக்கில் மத்திய போதை பொருள் தடுப்பு போலீசாரால் தேடப்பட்டு வந்த கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் என்கிற அப்துல் ரஹ்மான் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீசில் சிக்காமல் இருக்க புது புது சிம்கார்டுகளை பயன்படுத்தினாலும், அவர் பயன் படுத்திய செல்போனின் சிக்னலை வைத்து போலீசார் சாமர்த்தியமாக சுற்றிவளைத்து தட்டி தூக்கியதாக கூறப்படுகின்றது

அவரிடம் இருந்து திமுகவின் உறுப்பினர் அட்டையையும், எஸ்.டி.பி.ஐ கட்சி பிரமுகரின் விசிட்டிங் கார்டும் கைப்பற்றப்பட்டது

முகத்தை மூடி அழைத்துச்சென்ற ஜாபரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்திருப்பதாக மத்திய போதை பொருள் தடுப்பு காவல் உயர் அதிகாரி ஞானேஸ்வர் தெரிவித்தார்.

கடந்த 3 ஆண்டுகளில் 45 முறை உணவு பொருள் எனக்கூறி மெத்தபெடமைன் தயாரிக்க பயன்படும் மூலம் பொருளான சூடோபெட்ரினை ஜாபர் கடத்தி இருப்பதாகவும், தமிழ் நாடு, டெல்லி ஆகிய இடங்களில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு 3500 கிலோ வரை போதை பொருளை கடத்தியதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்றார்

கடத்தல் மூலம் ஈட்டிய கோடிக்கணக்கான பணத்தை ஜாபர்சாதிக் , அரசியல், சினிமா, ஓட்டல்கள், ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறையில் முதலீடு செய்திருப்பதாக தெரிவித்த அதிகாரிகள், போதை பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை முழுமையாக பயன்படுத்தி மங்கை என்ற படத்தை தயாரித்திருப்பதையும், சென்னையில் ஓட்டல்கள் தொடங்கி இருப்பதையும் சுட்டிக்காட்டினார்

போதை கடத்தல் பணத்தை அரசியல் பிரமுகர்களுக்கு நிதியாக கொடுத்திருப்பதும் ஏராளமான பிரமுகர்களுடன் ஜாபர் சாதிக் தொடர்பு வைத்திருப்பதாகவும் அவர்களை ஒவ்வொருவராக சம்மன் அனுப்பி விசாரிக்க இருப்பதாகவும் ஞானேஸ்வர் தெரிவித்தார்

மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினரில் வலையில் சிக்காமல் இருக்க திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து பதுங்கியிருந்த ஜாபர் சாதிக் சிக்கியுள்ளார்.

இந்த போதை பொருள் கடத்தல் மூலம் பெற்ற பணம் கோடிக்கணக்கில் திரையுலகிலும், அரசியலிலும் புழங்கி இருப்பதால இது குறித்து அமலாக்கத்துறை விசாரணையை முன்னெடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

 


Advertisement
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement