செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அலறிய படியே திரும்பிய மாணவி.. அப்பாவின் ஆசையை நிறைவேற்ற 12 ஆம் வகுப்பு தேர்வெழுதி வந்தார்..!

Mar 08, 2024 04:06:31 PM

எதாவது காரணம் கூறி தேர்வுக்கு மட்டம் போடும் சில மாணவர்கள் மத்தியில், விபத்தில் உயிரிழந்த தனது தந்தையின் மரணச்செய்தி அறிந்தும், பொறுப்புணர்வோடு 12ஆம் வகுப்பு பொது தேர்வெழுதிவிட்டு , தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்த, மாணவி ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழுதபடியே ஓடி வந்த சம்பவம் திருவெண்ணய் நல்லூர் அருகே நிகழ்ந்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அடுத்த கருவேப்பிலை பாளையத்தை சேர்ந்தவர் சுப்பராயலு. 51 வயது விவசாயியான இவர் மிளாகாய் ,கொத்தமல்லி வியாபாரம் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.

இவருக்கு சுகந்தி, சுகுணா,சுமி, அபி, அனிதா என்று 5 மகள்கள் இருக்கும் நிலையில் கடைசி மகள் அனிதா சரவணம்பாக்கம் அரசு மேல் நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு மடப்பட்டு பகுதியில் மிளகாய் வியாபாரத்துக்கு சென்ற சுப்பராயலு சைக்கிள் மீது பின் பக்கம் அதிவேகத்தில் வந்த இன்னோவா கார் மோதியது. இந்த விபத்தில் தூக்கிவீசப்பட்ட சுப்பராயலு இரு கால்களும் முறிந்த நிலையில் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பராயலு பரிதாபமாக பலியானார். தங்களின் ஒரே ஆதரவான தந்தை பலியான தகவல் அறிந்து 5 மகளும் கதறித்துடித்தனர்.

இவர்களில் அனிதாவுக்கு 12 ஆம் வகுப்பு பொது தேர்வு இருந்த நிலையில் தந்தையின் உடலை கூட பார்க்க இயலாமல் மனதை தேற்றிக் கொண்டு ஆங்கில தேர்வுக்கு சென்றார்.

தேர்வு எழுதி முடித்த கையோடு அவரை வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தனது தந்தையின் உடலை காண பைக்கில் இருந்து குதித்து ஓடிச்சென்றார்

கண்ணீர் விடு கதறி அழுத அனிதாவுக்கு ஆறுதலாக அவரது தோழிகளும் அங்கு வந்தனர். தன்னை நன்றாக படிக்க வைக்க தந்தை ஆசைப்பட்டதாகவும், இனி தன்னை யார் படிக்க வைப்பார்கள் என மாணவி ஏக்கத்துடன் கதறி அழுதார்

சுப்பராயலுவின் 5 பெண் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு அரசு உதவ வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் உருக்கத்துடன் கோரிக்கை வைத்துள்ளனர்


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement