செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வி.சி.கவில இருந்து வந்துருக்கோம்.. ரூ.50 ஆயிரத்த எடுத்து வையி.. ரூ.2 ஆயிரம் வேணா தர்ரேன்..! கேட்டதை தரமாட்டியா..? அடித்து உதைத்த சம்பவம்

Mar 05, 2024 07:53:34 AM

ஓய்வுபெற்ற ராணுவ வீரருக்கு சொந்தமான ரோலிங் ஷட்டர் தயாரிக்கும் நிறுவனத்தில் புகுந்து திருவிழா நடந்த 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை கேட்டு உரிமையாளரின் மகனை கும்பலாக சேர்ந்து தாக்கியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் 9 பேரை கும்பகோணம் போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் புறவழிச் சாலையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான பாலகிருஷ்ணன் என்பவர் ரோலிங் ஷட்டர் தயாரிக்கும் நிறுவனத்தை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறார் .

அந்த நிறுவனத்தை பாலகிருஷ்ணன் மகன் சௌந்தர்யான், மருமகன் மோகன் ஆகியோர் நிர்வாகம் செய்து வருகின்றனர்.

இந்த நிறுவனத்துக்கு கடந்த 26ஆம் தேதி சென்ற சிலர் , தங்களை விடுதலை சிறுத்தை கட்சியினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அமர்ந்து பேசி உள்ளனர்.

கோவில் திருவிழாவிற்கு நன்கொடை பணம் கொடுக்குமாறு கேட்டதாகவும், அங்கு இருந்த மோகன் 2000 ரூபாய் தருவதாக கூறிய நிலையில், 50,000 ரூபாய் வேண்டும் என கேட்டு வாக்குவாதம் செய்து அவரை சட்டையை பிடித்து தாக்கியதாகவும் கூறப்படுகின்றது

பணம் தர மறுத்த ஆத்திரத்தில் மோகனை சுற்றி வளைத்து கும்பலாக சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

சாலைக்கு இழுத்துச்சென்றும் தாக்கிய நிலையில் மோகனுக்கு ஆதரவாக சிலர் அங்கு வந்ததால் தாக்குதல் நடத்திய வசூல் கும்பல் அங்கிருந்து சென்றது.

காயம் அடைந்த மோகன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது . கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் நிறுவனத்தின் உரிமையாளர் பாலகிருஷ்ணன் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் தாலுக்கா காவல் நிலைய போலீசார் நிறுவனத்தில் பொருத்தப்பட்ட சிசிடி டிவி காட்சிகளை ஆய்வு செய்து கருப்பூரை சேர்ந்த கனகராஜ்,பூமிநாதன் உள்ளிட்ட ஒன்பது நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதில் ஏழு பேர் தலைமறைவான நிலையில் கனகராஜ்,பூமிநாதன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

 


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement