செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தனியா வாங்க சந்திக்கலாம்.. சிக்கிய செல்போன் மன்மதன்... செமயா கவனித்த பெண்கள்..!

Feb 18, 2024 09:52:44 AM

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டாக 70-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பெண் ஊழியர்களை இரவு நேரம் செல்போனில் அழைத்து ஆபாசமாக பேசி டார்ச்சர் செய்து வந்த 52 வயது ஆசாமியை, மடக்கிப்பிடித்த பெண்கள் அவரது சட்டையைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கோபித்துக் கொண்டு ஓடிய மாப்பிள்ளையை... கார் போட்டு தேடி அழைத்து வருவது போல போலீஸ் நிலையத்துக்கு பெண்களால் சட்டையை பிடித்து கூட்டிச் செல்லப்படும் இவர் தான் செல்போனில் பெண்களிடம் ஆபாசமாக பேசி தொல்லைக்கொடுத்த புகாருக்குள்ளான 53 வயது ரவுசு ராஜேந்திரன்..!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 70 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பெண் பணியாளர்களின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் இரவு நேரங்களில் ஆபாசமாக பேசி தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளான அங்கன்வாடி பெண் ஊழியர்கள் பலர் அந்த போன் நம்பரை பிளாக் செய்து வைத்துள்ளனர்.

அந்த செல்போன் நம்பரை பிளாக் செய்ய மறந்த பெண்களுக்கு தொடர்ந்து போன் வந்து கொண்டே இருந்ததால் பாதிக்கப்பட்ட அங்கன்வாடி பெண் ஊழியர்கள் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று அந்த மர்ம நபரிடம் போனில் நைசாக பேசிய பெண் ஒருவர், நேரில் சந்திக்கலாம் என்று நைசாக பேசி அவரை திருப்பத்தூர் அருகே வரவழைத்து மடக்கிப் பிடித்தனர்.

விசாரித்ததில் செல்போனில் பெண் குரலை கேட்டாலே ஆபாச வர்ணனை செய்யும் அந்த ஆசாமி சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பதும் பட்டன் போனில் இருந்து அங்கன்வாடி பெண் பணியாளர்களிடம் பேசியதும் தெரிய வந்தது. உடனடியாக அங்கன்வாடி ஊழியர்கள் அவனைப்பிடித்து உலகம்பட்டி காவல் நிலையத்திற்கு காரில் அழைத்து வந்தனர். காரில் வரும் வழியில் இறங்கி தப்பி ஓட முயன்ற அவனை, அங்கன்வாடி ஊழியர்கள் மடக்கிப் பிடித்து இழுத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ரவுசு ராஜேந்திரனை கைது செய்த உலகம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கன்வாடி பெண்களின் இந்த துணிச்சலான செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement