செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இளைஞரை நெஞ்சில் மிதித்து ஆல்பா போலீஸ் அட்டகாசம்.. மிரண்டு போன பயணிகள்..! தாக்கியது ஏன்? எஸ்.பி விளக்கம்

Feb 16, 2024 02:39:42 PM

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மது போதையில் வாகனம் ஓட்டி வந்த இளைஞரின் பைக்கில் இருந்து போலீசார் சாவியை பறித்த நிலையில், சாவியை திரும்பக்கேட்ட இளைஞரை தாக்கி கீழே தள்ளி, பூட்ஸ் காலால் நெஞ்சில் மிதித்த போலீஸ்காரரின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட ஆல்பா சிறப்புப்படை காவலர்களில் ஒருவர், இளைஞர் ஒருவரை அடித்து இழுத்து தரையில் தள்ளி, பூட்ஸ் காலால் நெஞ்சில் மிதிக்கும் காட்சிகள் தான் இவை..!

புதிய பேருந்து நிலையத்தின் அருகில் தென்காசி டவுன் உதவி ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மது அருந்திவிட்டு இரு சக்கரவாகனத்தை ஓட்டி வந்த ஆஷ்டன் என்ற இளைஞரை மறித்தனர். அவரது பைக்கில் மேலும் இருவர் இருந்த நிலையில், வண்டி சாவியை எடுத்த போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர். ஆஷ்டன் போலீசாரிடம் பைக் சாவியைக் கேட்டு வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகின்றது.

அப்போது ஆல்பா டீம் போலீசார் பேருந்து நிலையத்தில் ரோந்துப் பணிக்கு வந்தனர். போலீசாரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த ஆஷ்டன் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரையும் போலீசார் அங்கிருந்து செல்ல அறிவுறுத்திய நிலையில் அவர்கள் செல்லாமல் நின்றதால் , ஆல்பா டீமில் இருந்த காவலர் அழகுதுரை என்பவர், ஆஷ்டனை அடித்து, கழுத்தில் கைவைத்து தூக்கி கீழே போட்டு பூட்ஸ் காலால் நெஞ்சில் மிதித்ததுடன், எட்டியும் உதைத்தார். இதனால் ஆஷ்டன் மயங்கி சரிந்ததாகக் கூறப்படுகின்றது.

மயங்கிச்சரிந்த ஆஷ்டனை தூக்கி ஆசுவாசப்படுத்துவதற்கு அவரது நண்பர் முகமது காசிம் முயன்ற நிலையில் அடித்த போலீஸ்காரரும் சரி, அருகில் நின்ற காவலர்களும் எந்த ஒரு உதவியும் செய்யாமல் வேடிக்கை பார்த்தபடி சுற்றி வந்ததைப் பார்த்து பேருந்தில் இருந்த பயணிகள் மிரண்டு போயினர்.

மயக்கம் தெளியாமல் கிடந்ததால் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து ஆஷ்டனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர்.

பொது வெளியில் ஒருவரை போட்டு காவலர் கடுமையாகத் தாக்குவது நியாயமா? என்ற கேள்வியுடன், போலீஸ்காரர் பூட்ஸ் காலால் மிதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரிடம் கேட்ட போது, வாகன சோதனையின் போது போதையில் வாகனம் ஓட்டி வந்த நபர், போலீசாரை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததாகவும், அதன் காரணமாக காவலர் அவரைத் தாக்கியதாகவும் தெரிவித்தார். இது போன்ற நபர்களை ஆதரித்தால் அது சமூக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் என்று தெரிவித்த அவர் இருந்தாலும் சட்டத்தின்படி சம்பவம் தொடர்பாக காவலர் அழகுதுரையிடம் துறை ரீதியாக விசாரித்து வருவதாக தெரிவித்தார்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement