செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

எந்த கொம்பன் வந்தாலும் என்னை மீறி செய்ய முடியாது.. பள்ளிக்கூடத்தில் பஞ்சாயத்து ..! திமுக பஞ்.தலைவி கணவரின் வீடியோ

Feb 06, 2024 06:47:53 AM

ஓமலூர் அரசு பள்ளியில் கழிவறை கட்டும் பணிக்கான ஒப்பந்தம் தனக்கு தரவில்லை என்பதற்காக , அங்கே வேலை செய்து வந்த கட்டிட ஒப்பந்ததாரரை மறித்த திமுக பஞ்சாயத்து தலைவியின் கணவர், தன்னை மீறி எந்த கொம்பனும் வேலை செய்ய முடியாது என்று மிரட்டிச்சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.

வெள்ளாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தன்னை மீறி எந்த கொம்பனும் காண்டிராக்ட் எடுத்து வேலை செய்ய முடியாது என்று மிரட்டியதாக புகாருக்குள்ளாகி இருக்கும் திமுக பஞ்சாயத்து தலைவியின் கணவர் ராமச்சந்திரன் இவர் தான்..!

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 400மாணவர்கள் படித்து வருகின்றனர்.

அங்கு படிக்கின்ற மாணவர்களுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லாததால் அங்கு கழிவறை கட்டுமான பணிக்கு 6 லட்சம் ரூபாயை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியது.

இதற்காண ஒப்பந்த பணியை தேக்கம்பட்டி உதயநிதி ரசிகர் மன்ற துணை தலைவரான நடராஜன் செய்து வந்தார்.

சுமார் 300 சதுர அடியில் 4 கழிப்பறை கட்டும் பணி தொடங்கி நடந்து வந்த நிலையில் பள்ளிக்கு சென்ற வெள்ளாளபட்டி திமுக பஞ்சாயத்து தலைவி சியாமளா தேவியின் கணவர் ராமச்சந்திரன், தனது ஊரில் உள்ள பள்ளி வேலையை வெளியூரை சேர்ந்தவருக்கு கொடுத்தது ஏன் கேட்டு தகராறு செய்ததாகவும், 6 லட்சம் ரூபாய்க்கு கான்கிரீட்டில் கட்ட வேண்டிய கழிவறையை ஆஸ்பெட்டாஸ் சீட் வைத்து கட்டுவது எப்படி சரியாக இருக்கும் ?என்று கேட்டு வேலையை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகின்றது.

இரு தரப்பையும் அழைத்து தலைமை ஆசிரியை சமாதான பேச்சுவார்த்தை நடத்திய போது, தன்னை மீறி எந்த கொம்பனும் இந்த கழிவறையை கட்ட முடியாது என்று அவர் மிரட்டி விட்டு சென்றதாக வீடியோ ஒன்று வெளியானது

இதனால் நொந்து போன தலைமை ஆசிரியை, ராமச்சந்திரனை தொடர்பு கொண்டு, இருவரும் சண்டை போடாமா யாராவது ஒருத்தர் கட்டிக் கொடுங்கப்பா ... என்று கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டார்

பள்ளிக்கூடத்தில் கழிவறை ஒப்பந்தம் கேட்டு மிரட்டியதாக பரவிய அந்த வீடியோ குறித்து ராமச்சந்திரனிடம் கேட்ட போது, தான் யாரையும் மிரட்டவில்லை என்றும் தனது ஊர் பள்ளிக்கு தரமான கழிவறை கட்டிக் கொடுக்க வேண் டும் என்ற நோக்கிலேயே அப்படி பேசியதாகவும், தற்போது அந்த கழிவறையை தான் தரமாக கட்டிவருவதாகவும் விளக்கம் அளித்தார்

கழிவறை ஒப்பந்தம் தொடர்பாக உதயநிதி மன்ற நிர்வாகியும், திமுக பிரமுகரும் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement