செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

அடித்துக் கொலை... மதுவுக்கு பணம் தராததால் தாயை அடித்துக் கொன்ற மகன்

Feb 05, 2024 06:24:03 AM

தூங்கிக் கொண்டிருந்தவரை அதிகாலை 3 மணிக்கு எழுப்பி மது குடிக்க பணம் கேட்டும் தராததால் கடைசி விவசாயி திரைப்படத்தின் நடிகையை பெற்ற மகனே கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் மதுரை அருகே நடந்தது.

சாமி கும்பிட ஜாதி பார்க்கக் கூடாது என திரைப்படத்தில் வசனம் பேசிய இவர் தான் பெற்ற மகனால் அடித்துக் கொல்லப்பட்ட நடிகை காசம்மாள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஆனையூரைச் சேர்ந்தவர் காசம்மாள். விவசாய கூலி தொழிலாளியான இவர் அப்பகுதியில் நடைபெற்ற கடைசி விவசாயி திரைப்பட சூட்டிங்கின் போது வாய்ப்பு பெற்று அந்த படத்தில் நடித்தார். தேசிய விருது பெற்ற நல்லாண்டிக்கு தங்கையாகவும், படத்தின் ஹீரோ விஜய் சேதுபதிக்கு அத்தையாகவும் நடித்திருந்தார் காசம்மாள்.

மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக தாயோடு வசித்து வந்தார் அவரது மூத்த மகன் நமகோடி. சரிவர வேலைக்குச் செல்லாத நமகோடி மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

தன்னிடம் பணம் இல்லாத போதெல்லாம் கூலி வேலைக்குச் சென்று தாயார் வைத்திருக்கும் பணத்தை சண்டையிட்டு வாங்கிச் சென்று போதைக்காக நமகோடி செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

போதையில் வீட்டில் படுத்திருந்தவருக்கு அதிகாலை 3 மணியளவில் போதை தெளியவே தூங்கிக் கொண்டிருந்த தாயை எழுப்பி பணம் கேட்டுள்ளார் நமகோடி. தன்னிடம் பணம் இல்லையெனவும் இந்த நேரத்தில் பணம் கேட்கிறாயே எனவும் கேட்ட தாய் காசம்மாளை அங்கிருந்த கட்டையால் நமகோடி தாக்கியதாக கூறப்படுகிறது.

தலைப்பகுதியில் பலத்த காயமடைந்து ரத்தம் வெளியேறி காசம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காசம்மாளை வேலைக்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தவர்கள் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். காசம்மாள் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த உசிலம்பட்டி தாலுகா போலீஸார், தலைமறைவாக இருந்த நமகோடியை கைது செய்தனர்.

தள்ளாத வயதிலும் உழைத்து சாப்பாடு போட்டு வந்த தாயை மது போதைக்காக மகனே அடித்துக் கொலை செய்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement