3-வது குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் குட முழுக்கு நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தனது மனைவியுடன் பங்கேற்று தரிசனம் செய்தார்.
நாமக்கல் மாவட்டம் வையப்பமலை மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தை திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் செல்வ விநாயகர் ஆலயம் உள்ளிட்ட 4 கோவில்களில் நடைபெற்ற கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகே புனரமைக்கப்பட்ட மாரியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.